என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Motorcycles"
- கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வானூர் அருகே தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 100 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் சாராயம் கடத்தப்படுவதாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வானூர் அருகே தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேேய போட்டுவிட்டு தலைமறைவானார். உஷாரான போலீசார் உடனே அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 100 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் புதுவை மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் யார்? இந்த கடத்தலுக்கு துணையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொடரும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலகோபாலபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 59). தேவாலயத்தில் வேலை பார்த்து வந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சம்பவத்தன்று திருடி சென்றனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவர் சம்பவத்தன்று வழிவிடு முருகன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்ேபாது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள மூளிபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் தனது மோட்டார் சைக்கிளை பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தியிருந்த ேபாது மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடு போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது.
- உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகின்றன.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 2-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு போகின்றன.
குறிப்பாக உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகின்றன.
இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபவர்களை கண்டு பிடித்து அவர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி மேற்பார்வையில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் அடையாளம் தெரியவந்தது. இதனடிப்படையில் புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்த வல்லரசு (22) மற்றும் பண்ருட்டி முருங்கப்பாக்கம் ரோட்டை சேர்ந்த சுபாஷ்(22) ஆகிய 2 பேரை கடந்த 2-ந் தேதி கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஹரி என்ற சஞ்சய்(20) என்பவரை கடந்த 19-ந் தேதி உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்ட சஞ்சயை காவலில் எடுத்து விசாரிக்க உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சஞ்சயை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வல்லரசு, சுபாஷ் ஆகியோருடன் சேர்ந்த சஞ்சய் கடந்த 3 ஆண்டுகளாக புதுவையில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி, சூர்யா ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சஞ்சய் தெரிவித்தான். இதையடுத்து சஞ்சய் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுவையில் திருடப்பட்ட 50 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.
- போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
உடுமலை :
உடுமலையை அடுத்த எலையமுத்தூர் செல்வபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 35). விவசாயி.இவர் கடந்த 10-ந்தேதி உடுமலை கச்சேரி வீதியில் உள்ள ஒரு ஓட்டலின் முன்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காபி குடிக்க சென்றார்.சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது யாரோ மர்ம ஆசாமிகள் அவருடைய மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ராதாகிருஷ்ணன் உடுமலை போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.மேலும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் உடுமலையை சேர்ந்த செந்தில்குமார் (41) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் திருடி போலீசில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது மீண்டும் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட செந்தில்குமாரிடமிருந்து ராதாகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் உள்பட 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- புதுவையில் 28 மோட்டார் சைக்கிள்களை திருடிய கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- புதுவையில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்துவருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 28 மோட்டார் சைக்கிள்களை திருடிய கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்துவருகிறது. ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் இதனை முற்றிலும் தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் நேற்று இரவு புதுவை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் புதுவை காந்தி வீதி-சின்னவாய்க்கால் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.
அந்த மோட்டார் சைக்கிளில் முன்பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கடலூர் சி.என்.பாளையத்தை அடுத்த கிடையார்குப்பத்தை சேர்ந்த சவுந்திரராஜன்(வயது25) என்பது தெரியவந்தது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை பின் பக்கத்தில் இருந்து நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை நடத்திய போது அந்த வாகனம் புதுவை பதிவு எண் கொண்டதாக இருந்தது. இதனை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அந்த வாகனத்தை புதுவை அண்ணா சாலையில் மதுக்கடை எதிரே திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் புதுவையில் 27 வாகனங்களை திருடியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து சவுந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடிய 28 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
- பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
- நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
நெல்லை:
பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனை மாநகர கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா வழங்கினார். அதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு திருக்குறள் எழுதுமாறு அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதற்காக நெல்லை மாநகர காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் தலைகவசம் அணியாமலும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வருகிறார்கள். இது தொடர்பாக 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகர பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் சென்றால் அவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்திற்கு அவர்களின் பெற்றோர்களை அழைத்து வரப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும்.
அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டுப் போவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போன இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது அதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மேலும் அனைத்து இடங்களிலும் ஒரே நபர்தான் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த நபர் போரூர் ஜெய பாரதி நகரை சேர்ந்த சிவகுமார் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வெளி இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடினால் அதனை எடுத்து வரும் வழியில் போலீசிடம் சிக்கி கொள்வோம் என்பதாலும், பதுக்கி வைப்பதில் சிரமம் இருக்கும் என்பதாலும் அவர் வசிக்கும் பகுதியிலேயே மோட்டார் சைக்கிள்களை திருடி அதனை அந்த பகுதியிலேயே பதுக்கி வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகுமார் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.
முன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் பின்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
எக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்