என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வானூர் அருகே மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் கடத்தல்
Byமாலை மலர்7 Sep 2022 9:47 AM GMT
- கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வானூர் அருகே தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 100 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் சாராயம் கடத்தப்படுவதாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வானூர் அருகே தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேேய போட்டுவிட்டு தலைமறைவானார். உஷாரான போலீசார் உடனே அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 100 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் புதுவை மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் யார்? இந்த கடத்தலுக்கு துணையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X