என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடரும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
- தொடரும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலகோபாலபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 59). தேவாலயத்தில் வேலை பார்த்து வந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சம்பவத்தன்று திருடி சென்றனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவர் சம்பவத்தன்று வழிவிடு முருகன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்ேபாது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள மூளிபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் தனது மோட்டார் சைக்கிளை பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தியிருந்த ேபாது மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடு போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்