search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர்கள்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

    மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர்கள்

    • புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது.
    • உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 2-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு போகின்றன.

    குறிப்பாக உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகின்றன.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபவர்களை கண்டு பிடித்து அவர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி மேற்பார்வையில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் அடையாளம் தெரியவந்தது. இதனடிப்படையில் புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்த வல்லரசு (22) மற்றும் பண்ருட்டி முருங்கப்பாக்கம் ரோட்டை சேர்ந்த சுபாஷ்(22) ஆகிய 2 பேரை கடந்த 2-ந் தேதி கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஹரி என்ற சஞ்சய்(20) என்பவரை கடந்த 19-ந் தேதி உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்ட சஞ்சயை காவலில் எடுத்து விசாரிக்க உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சஞ்சயை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வல்லரசு, சுபாஷ் ஆகியோருடன் சேர்ந்த சஞ்சய் கடந்த 3 ஆண்டுகளாக புதுவையில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் இந்த திருட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி, சூர்யா ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சஞ்சய் தெரிவித்தான். இதையடுத்து சஞ்சய் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுவையில் திருடப்பட்ட 50 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×