search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister velumani"

    தமிழகத்தில் 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்க விழா, தூய்மை கணக்கெடுப்பு இலச்சினை அறிமுக விழா, தூய்மை வாகனம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தூய்மை ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை முழு சுகாதாரம் அடைந்த மாநிலமாகவும், திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலை இல்லாத மாநிலமாகவும் உருவாக்கும் வகையில் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 4639 கோடி செலவில் 49.63 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டி உள்ளது.12,040 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அல்லாத ஊராட்சிகள் என கிராம சபை கூட்டங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    2014-15-ம் ஆண்டு ரூ. 610 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், 12,524 ஊராட்சிகளில் செயல்படுத்தபட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 66,025 தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக நடப்பு ஆண்டில் ரூ. 206 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கிராமங்களில் குப்பையை எளிதாக அப்புறப்படுத்தும் வகையில் 93000 குப்பை தொட்டிகளும், 43000 மிதி வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை தர வரிசைப்படுத்த மத்திய அரசு தூய்மை கணக்கெடுப்பு-2018 திட்டம் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தூய்மை ரதம் அனுப்பப்பட்டு கணக்கெடுத்து தரவரிசைப் படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராம சந்தை, வழிபாட்டு தலங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஹரிஹரன் (கோவை), பழனிசாமி (திருப்பூர்), இன்னசென்ட் திவ்யா (நீலகிரி),பிரபாகரன் (ஈரோடு), நாகராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், ஓ.கே. சின்னராஜ், ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர்கள் லட்சுமிபதி, ராதா, ராஜஸ்ரீ, விஜய முத்து மீனாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மற்றும் அரசு துறை அலுவலர்க்ள, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். #ADMK #CauveryIssue #DMK #congress
    கோவை:

    கோவை குறிச்சி குளத்தில் ஆகாய தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்க போவதாக கூறியிருக்கிறாரே?

    பதில்: வருமான வரித்துறை சோதனை பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முதல்-அமைச்சர் விளக்கம் கொடுத்து உள்ளார். ஊழலுக்காக தமிழ்நாட்டில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சிதி.மு.க. தான்.


    கேள்வி: காவிரி பிரச்சனையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறார்கள் என்று முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார். அவ்வாறு தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காதது ஏன்?

    பதில்: எங்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சனையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதம் காட்டியது. ஆனாலும் அதன்பிறகு ஆணையத்தை அமைத்து விட்டார்கள்.

    மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சனையில் முழுவதும் துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #CauveryIssue #DMK #congress
    பல்லாவரம் தொகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பல்லாவரம் தொகுதியில் தற்போது நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை குறித்து சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் இ.கருணாநிதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    “அவர் பேசும் போது பல்லாவரத்தில் 10 நாட்களுக்கு 1 முறைதான் குடிநீர் வருகிறது. இங்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டுமானால் பாலாற்றில் இருந்து கொண்டு வரப்படும் குழாயை மாற்றிவிட்டு அகலமான குழாய் அமைத்தால் நிரந்தர தீர்வுகிடைக்கும். இதற்கு ரூ.50 கோடி செலவாகும் என்று குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது” என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி பேசியதாவது-

    பல்லவபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், நாளொன்றுக்கு நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் குடிநீரும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம், நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் லிட்டர் குடிநீரும் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 36 இலட்சம் லிட்டர் குடிநீரும் ஆக மொத்தம் 86 இலட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பல்லாவரம் நகராட்சி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, 99.95 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர்த் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு சென்னை குடிநீர் வாரியம் மூலம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அனகாபுத்தூர் நகராட்சியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம், நாளொன்றுக்கு 2.53 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 53 லிட்டர் குடிநீர் வீதம், 7 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

    குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, 14.87 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிதிகளைக் கொண்டு குடிநீர் திட்டம் எடுக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    பம்மல் நகராட்சியில் தற்போது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம், 3.19 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 42 லிட்டர் வீதம், 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பம்மல் நகராட்சி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, ரூ.43.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    தற்போது நடைபெற்று வரும் திட்டத்தில், 89 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் ஜனவரி2019ல் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை, மாண்புமிகு உறுப்பினருக்கு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly
    மதுரையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். #MaduraiMultilevelParking
    சென்னை:

    மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பழைய சென்ட்ரல் மார்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது விவாதிக்க வேண்டும் என சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

    இந்த  தீர்மானத்தின் மீது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட, பழைய சென்ட்ரல் மார்கெட், மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டதன் காரணமாக, தற்போது நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.  

    தற்போது பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில், அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள்,  தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, 24 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த பன்னடக்கு வாகன நிறுத்துமிடத்தின் முதல் அடித்தளம் 6,394 சதுர மீட்டர் பரப்பிலும்,  2ம் அடித்தளம் 6,394 சதுர மீட்டர் பரப்பிலும், ஆக மொத்தம் 12,788 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது.

    இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், 118 நான்கு சக்கர வாகனங்களும்,  1,601  இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு ஏதுவாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

    இத் திட்டத்திற்கு, 13.6.2018 அன்று நடைபெற்ற மாநில அளவிலான உயர்மட்ட வழிகாட்டுக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, செயலாக்கம் பெற அரசின் பரிசீலனையில் உள்ளது.  

    இத்திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல் சீர்மிகு  நகரத் திட்டத்தின் கீழ், பெரு நகர சென்னை மாநகராட்சி உட்பட 9 மாநகராட்சிப் பகுதிகளில்,  மொத்தம்,  335.41 கோடி மதிப்பீட்டில், 14 பன்னடக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி,  தியாகராய நகரில் உள்ள, தியாகராயா சாலையில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 36 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் 2.2.2018 அன்று துவங்கப்பட்டு, துரிதமாக  நடைபெற்று வருகின்றன.

    இந்த பல அடுக்கு வாகன நிறுத்தம், 2 கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் என மொத்தம் 9 தளங்கள் 8808 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட கட்டடமாக அமைக்கப்படுகிறது.          

    2 கீழ் தளத்தில் தோராயமாக 550 இரு சக்கர வாகனமும், தரைத்தளம் மற்றும் 6 மேல்தளத்தில் 250 நான்கு சக்கர வாகனமும் நிறுத்தும் வகையில் அமைக்கப்படும். 

     இது முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் செயல்படுத்தப்படும். இத்திட்டம், பேரிடர்களை சமாளிக்கும் வகையில், நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தற்போது ஆழ்துளை கடைக்கால் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஜனவரி, 2020-க்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MaduraiMultilevelParking
    சென்னையில் டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். #MinisterVelumani #DrikingWater

    சென்னை:

    ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடை பெற்றது.

    இந்த கருத்தரங்கில் குடிநீர் திட்டப்பணிகளில் குளோரின் பயன்பாடு குறித்த புத்தகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டு பேசினார். இதில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கருத்தரங்கம் முடிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.21,050 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது.

    சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டாலும் கூடுதலாக 180 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.

    இந்த திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது சென்னையில் 40, 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது.

    குடிநீர் திட்ட பணிகளுக்காக 170 பொறியாளர்களுக்கு மணிலாவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 24 நகராட்சி பொறியாளர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 18 பெரிய குடிநீர் திட்டங்களில் 11 பணிகள் வேகமாக நடைபெறுகிறது. 7 பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    சென்னையில் கடந்த ஆண்டு இதே நாளில் 449 மி.லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது 650 மி.லிட்டர் நீர் வழங்குகிறோம். டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. 4 ஏரிகளில் இருந்து டிசம்பர் மாதம் வரை தண்ணீர் பெற முடியும்.

    மற்ற மாவட்டங்களில் மழை பெய்து உள்ளதால் குடிநீர் பிரச்சினை அதிகம் ஏற்படவில்லை. சென்னையிலும் விரைவில் நல்ல மழை பெய்யும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

    சென்னையில் 33 குளம், ஏரிகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. 15 கோவில் குளங்களும் சீரமைக்கப்படுகிறது. இதுதவிர 158 ஏரிகளை டி.வி.எஸ்., அசோக் லைலேண்ட் உள்ளிட்ட பெரிய கம்பெனிகள் உதவியுடன் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

    தமிழ்நாட்டில் கோடை மழையால் 1.50 மீட்டர் வரை நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சென்னை ஏரிகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும்போது 850 மி.லிட்டர் குடிநீர் கொடுத்தோம். தட்டுப்பாடு சமயங்களில் 450 மி.லிட்டர் குடிநீர் வழங்கி இருக்கிறோம். எனவே இப்போது கொடுக்கப்படும் 650 மி.லிட்டர் குடிநீர் என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVelumani #DrikingWater

    ×