search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister udayakumar"

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் கூறினார். #thiruparankundramelection
    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூரில், தமிழக அரசு சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி வரும் 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விளக்க கூட்டம் சேவூரில் நேற்றிரவு நடந்தது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- 

    ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராக வழக்கிற்கு மேல் வழக்குகளை போட்டனர். தற்போது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு வலியுறுத்தினர். அதற்கு, நிறைய வழக்குகள் உள்ளது எனக்கூறி முதல்-அமைச்சர் இடம் தரமறுத்தார்.
    மறுநாள் காலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டனர். இதில் இருந்து வழக்குகளை போட்டவர்களை பின்னால் இருந்து இயக்கியது தி.மு.க. தான் என தெரிகிறது. இனி ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சிஸ்டம் தான் வெற்றிபெறும் என்றார்.  #thiruparankundramelection
    காவிரி நதி நீர் கால்வாய்களில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடக்கூடாது அமைச்சர் உதயகுமார் கூறினார். #MinisterUdayakumar #Cauveryflood
    சென்னை:

    அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் கடந்த 9-ந்தேதி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

    அதனை தொடர்ந்து காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை உயரம்-120.2 அடி, கொள்ளளவு- 93.79 டி.எம்.சி, வினாடிக்கு 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து-வினாடிக்கு 1,35,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 13 மற்றும் 14-ந்தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterUdayakumar #Cauveryflood


    தேவகோட்டையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி தொடக்க விழா நடைபெற்றது. பேரணியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

    முதல் கட்டமாக மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    தற்போது 2-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சிலம்பனி விநாயகர் கோவிலில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது. அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் வரவேற்றனர். பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    இன்று காலை தேவகோட்டையில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட சைக்கிளில் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் ராம்நகர் கண்ட தேவி, ஆறாவயல் வழியாக காரைக்குடியை நோக்கி சென்றனர்.

    இந்த பேரணி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பத் தூர், சிவகங்கை, மானா மதுரை சென்றடைகிறது.

    இதில் தேவகோட்டை நகரச் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணைச்செயலாளர் கணேசன் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையுடன் மீனம்பாக்கம் இணைகிறது என்று சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். #TNAssembly #MinisterUdayakumar

    சென்னை:

    பல்லாவரம் இ.கருணாநிதி சட்டசபையில் இன்று மீனம்பாக்கம், பொழிச்சலூர், திரிசூலம் பகுதிகள் பல்லாவரம் தாசில்தார் அலுவலக கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “ஏற்கனவே பொழிச்சலூர், பல்லாவரம் தொகுதியில் உள்ளது. மீனம்பாக்கம் கிராமம் சென்னை மாவட்டத்துடன் இணைகிறது, திரிசூலம் பல்லாவரம் வட்டத்துடன் இணையும். சென்னை மாவட்ட விரிவாக்கப்பணி தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வருகிற ஜூலை மாத இறுதியில் விரிவாக்கப் பணி முடிவடைந்து செயல்படும்” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “சென்னை மாநகராட்சிக்கு இணையாக வருவாய் மாவட்டத்திலும் ஒரே மாதிரியான ஆட்சி எல்லைகள் வரும் வகையில் மாவட்ட எல்லைகள் விரிவுபடுத்தப்படுகிறது” என்றார்.

    தொடர்ந்து இ.கருணாநிதி:- 3 நகர நிர்வாகத்துக்கு ஒரு வி.ஏ.ஓ.தான் உள்ளார். பல்லாவரம் நகர வி.ஏ.ஓ. அனகாபுத்தூர் சென்று பணியாற்றுகிறார். எனவே ஒரு கிராமத்துக்கு ஒரு வி.ஏ.ஓ. பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10,000 பட்டாக்களை பம்மல், அனகாபுத்தூருக்கு வழங்க வேண்டும்” என்றார்.

    இதற்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்கையில், “அரசு இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார். #TNAssembly #MinisterUdayakumar

    மு.க.ஸ்டாலின் சினிமாவிற்கு கதை வசனம் எழுதலாம் என்று அமைச்சர் உதயகுமார் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ministerudayakumar #MKStalin #Cauveryissue

    காஞ்சீபுரம்:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஞ்சீபுரம் வழியாக காரில் சென்றார். காஞ்சீபுரத்தில் அமைச்சர் உதயகுமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும். காவிரி விவகாரத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் நடத்தும் நாடகம் மக்களிடம் எடுபடாது.

    தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கேற்ற போதும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.


    ஆனால் அ.தி.மு.க. அரசு சட்டமன்றம், பாராளுமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என அனைத்து வகையிலும் காவிரி பிரச்சனையில் அழுத்தம் கொடுத்து தற்போது பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது.

    அந்த வெற்றியில் தி.மு.க. தங்களது பங்களிப்பு இல்லை என்று தெரிந்து தமிழக மக்களுக்கு காலம் காலமாக செய்த துரோகத்தினை மறக்கடிக்க போராட்டம் நடத்தி வேடிக்கை காட்டுகிறது. இந்த வேடிக்கையை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை.

    எனவே ஸ்டாலின் எடுபடாத இந்த நாடகத்தை நடத்துவதுற்கு பதிலாக சினிமாவிற்கும் மேடைநாடகத்திற்கும் கதை வசனம் எழுதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளி நாயகம், தமிழ்வாணன், படுநெல்லி தயாளன் உடனிருந்தனர். #Ministerudayakumar #MKStalin #Cauveryissue

    ×