search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist Communist"

    • மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க ேகாரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெத்தானியாபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு பஸ்சில் பயணம் செய்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறிவிழுந்து பலியானதன் காரணமாக அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.

    பயணிகள் பஸ்படிகட்டில் பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது. நெருக்கடியான நேரத்தில் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையான இடங்களில் சிக்னல் அமைக்க வேண்டும். இறந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். குரு தியேட்டர் சந்திப்பு அருகில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருசாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.பகுதிகுழு செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் தொடங்கி வைத்தார். மேற்கு 1-ம் பகுதிகுழு செயலாளர் கணேசன், பகுதிகுழு உறுப்பினர் சுதாரணி ஆகியோர் பேசினார். மாவட்டச் செயலாளர் கணேசன் நிறைவுரையாற்றினர்.

    இதில் மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன், மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் பாண்டி, மல்லிகா, சிவராமன், கவுன்சிலர் ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



    • அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் கடமையை மாநில அரசுகள் ஏற்றுள்ளன.
    • மத்திய அரசு மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    மின்சாரம், மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது. அன்றாட வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும். அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை, நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கம், தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு, மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

    தனது போக்கிற்கு மாநில அரசுகளையும், மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது. ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசாங்கம் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக நுகர்வோருக்கு கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுகின்றன. மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் ரூ. 926 கோடியோ, ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ. 5085 கோடிகள் என்பதோ மத்திய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ.2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள்.

    அவர்கள் அந்த தொகையை செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் – 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது. தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது. இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அதனை காரணமாக்கி, பட்டியல் வெளியிட்டு, தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன?. பெருமுதலாளிகளுக்கு வெண்ணையும், சாமானிய மக்களுக்கு சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது.

    சாமானிய மக்களின் மீதும், சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டை சுமத்தும் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கண்டிக்கிறது. உடனடியாக தனது கொள்கையை திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
    • வன்முறை கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

    தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    தாக்குதல் நடந்த வீடியோக்களை பார்க்கும்போது எதுவுமே உணர்ச்சிவயப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.

    அதுவும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, கொடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

    அதிகார வெறியோடு கிடைப்பதில் எல்லாம் அரசியல் செய்யும் பாஜகவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செய்வதில் கூட தங்கள் அரசியல் லாபத்தை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    இதுவரை தாக்குதல் நடத்திய கும்பலை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக, வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சமூக ஊடகப் பதிவுகளையே செய்து வருகிறார்கள்.

    எனவே, தமிழ்நாடு காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    பாஜகவினரின் அரசியல் நாகரீகமற்ற இந்த அராஜகமான வன்முறைச் செயலை பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கஞ்சா விற்பனைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்கப்பட்டார்.
    • அணைக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்

    புதுச்சேரி:

    கஞ்சா விற்பனைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்கப்பட்டார்.

    புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் நேதாஜி நகர் அணைக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது. 35). இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்புடைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். புதுவையில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் போஸ்டர் ஒட்டினார்.

    அதன் பின்னார் இரவு 11.30 மணியளவில் சாலையோர டிபன் கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சாமிபிள்ளை தோட்டத்தையை சேர்ந்த செல்வகணபதி, விஸ்வநாதன், சுதர்சன் ஆகியோர் பாஸ்கரை கையால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பாஸ்கர் லாஸ்பேட்டையில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை தாக்கிய செல்வகணபதி, விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்தார். சுதர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

    • புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும்.

    மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரிசி வழங்காத 15 மாதங்களுக்கு சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.9 ஆயிரமும், மஞ்சள் கார்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் உடனடியாக வழங்க வேண்டும்.

    தகுதியுள்ள ஏழைகளுக்கு சிகப்பு அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதையொட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம், மக்கள் சந்திப்பு, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல்துறை முன்பு இன்று போராட்டத்தை தொடங்கினர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.

    முன்னாள் செயலாளர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், கொளஞ்சியப்பன்,

    சி.ஐ.டி.யூ. சீனுவாசன், சந்தியா, இளவரசி, கலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதை கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 1-ந் தேதி வரை புதுவையில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    • புதுவை அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்
    • தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆகஸ்ட் 2-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    போராட்டத்தை மக்கள் மத்தியில் விளக்க கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலையிலிருந்து பைக் பிரச்சார பயணம் தொடங்கியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மூத்த தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

    பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்யா நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், நகர செயலாளர் ராம்ஜி, பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், பிரதேச குழு உறுப்பினர்கள், ராமசாமி,சங்கர், சரவணன் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பிரச்சார ஊர்வலம் தியாகிகள் சிலை அருகில் தொடங்கி நெல்லித்தோப்பு, சாரம் லெனின் வீதி, பெரியார் சிலை, நேரு வீதி, காந்திவீதி, அஜந்தா தியேட்டர், முத்தியால்பேட்டை, பாரதி நகர், கருவடிக்குப்பம், பெத்து செட்டி பேட்டை, செல்வ பெருமாள் பேட்டை, லாஸ்பேட்டை கதிர்காமம், மேட்டுப்பாளையம் வரை சென்றது.

    • பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு.
    • மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு

    விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

    அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

    மத்திய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 4000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, சத்தீஷ்கர், மேற்குவங்காளம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன.

    மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    மத்திய அரசு அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு இளைஞர்களை 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் திட்டத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் இத்திட்டத்தை கைவிடக் கோரியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர் திருமலை, டாக்ஸி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணன், மாரியப்பன், பிச்சைக்கனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் நியமிக்க வேண்டும். புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். நகர் குழு உறுப்பினர்கள் மேரி, முருகானந்தம், செல்வராஜ், மாதர் சங்க நகரத் தலைவர் மைதிலி, மாணவர் சங்க தாலுகா செயலாளர் ஹரிராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

    • மாநில உரிமைகள் உள்ளிட்ட அம்சங்களில் தமிழக அரசோடு ஆளுநர் முரண்படுகிறார்.
    • அரசு சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை.

    தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அண்மையில் ஆளுநர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த பரிசீலனையை நடத்தியிருக்கிறார்.

    அதில் தேசிய கல்விக் கொள்கையை அதன் சாரம் குறையாமல் அமல்படுத்துவது தான், பள்ளி மட்டத்திலேயே குழந்தைகளை வடிவமைக்க உதவும், இதன் மூலம் இந்திய தேசத்தை உலகின் அறிவு தலைநகரமாக மாற்றமுடியும் என பேசியிருக்கிறார்.

    பெருவணிகமயமாகும் கல்வியால், சமூக நீதி தொலைக்கப்பட்ட, மொழி திணிப்பு அம்சங்கள் கொண்ட, மதவெறி சாராம்சத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தால் உருவாகும் அறிவு அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது, அபாய கரமானதாகத்தான் இருக்கும்.

    கேந்திரிய வித்யாலயா மற்றும் அதன் பாடத்திட்டம் உள்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் வரும் என்றாலும், ஆளுநர் இது சம்பந்தமான கூட்டத்தில் பேசியிருப்பதைத் தனிமைப்படுத்தி பார்க்க முடியாது.

    ஆளுநரின் கடமைகள், அதிகார வரம்பு, அரசியல் சாசன கோட்பாடுகள், மாநில உரிமைகள் என முக்கிய அம்சங்களில் தமிழக அரசோடு முரண்படுகிறார் என்பது தான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

    தமிழக அரசும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு இணையானதொரு நிர்வாகத்தை ஆளுநர் நடத்த விரும்புகிறாரோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும், ஜனநாயக எண்ணம் கொண்டோர் குரல் எழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூரில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் “பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

    தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

    அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியதோடு, கார்த்திக் என்பவரை “என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற” என சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார். மேலும் கார்த்திக்கை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். “ஏன் அவரை அடிக்கிறீர்கள்” எனக் கேட்டவர்களை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

    பாலியல் தொல்லை

    இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும் அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார்.

    மிருகத்தனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    “இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம், பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது” என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதை அறியலாம்.

    கடந்த ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப்பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக்கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...பதான்கோட் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறியுள்ளார்.
    திருச்சி:

    தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.) என்ற தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பயங்கரவாதம், தேசப்பற்று, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என பாரதீய ஜனதா செய்த பிரசாரத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து விட்டனர். அதனால் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் வந்து உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இது தேர்தல் ரீதியான தோல்விதான். இயக்க ரீதியான தோல்வி அல்ல. இயக்க நடவடிக்கைகள் மூலம் தேர்தல் தோல்வியை சரிகட்ட முடியும். 

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களால் எந்த பலனும் கிடைக்காது என செய்யப்படும் பிரசாரம் தவறானது. இந்த எம்.பி.க்களால் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான் பலன் கிடைக்காது.

    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு வசதியாக கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறோம். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம். காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு தான் கோதாவரி இணைப்புக்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×