search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி மீது தாக்குதல்
    X

    கைது செய்யப்பட்ட செல்வகணபதி, விஸ்வநாதன்

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி மீது தாக்குதல்

    • கஞ்சா விற்பனைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்கப்பட்டார்.
    • அணைக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்

    புதுச்சேரி:

    கஞ்சா விற்பனைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்கப்பட்டார்.

    புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் நேதாஜி நகர் அணைக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது. 35). இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்புடைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். புதுவையில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் போஸ்டர் ஒட்டினார்.

    அதன் பின்னார் இரவு 11.30 மணியளவில் சாலையோர டிபன் கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சாமிபிள்ளை தோட்டத்தையை சேர்ந்த செல்வகணபதி, விஸ்வநாதன், சுதர்சன் ஆகியோர் பாஸ்கரை கையால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பாஸ்கர் லாஸ்பேட்டையில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை தாக்கிய செல்வகணபதி, விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்தார். சுதர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×