search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரச்சார பயணம்
    X

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வாகன பிரசாரம் செய்த காட்சி.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரச்சார பயணம்

    • புதுவை அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்
    • தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆகஸ்ட் 2-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    போராட்டத்தை மக்கள் மத்தியில் விளக்க கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலையிலிருந்து பைக் பிரச்சார பயணம் தொடங்கியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மூத்த தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

    பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்யா நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், நகர செயலாளர் ராம்ஜி, பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், பிரதேச குழு உறுப்பினர்கள், ராமசாமி,சங்கர், சரவணன் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பிரச்சார ஊர்வலம் தியாகிகள் சிலை அருகில் தொடங்கி நெல்லித்தோப்பு, சாரம் லெனின் வீதி, பெரியார் சிலை, நேரு வீதி, காந்திவீதி, அஜந்தா தியேட்டர், முத்தியால்பேட்டை, பாரதி நகர், கருவடிக்குப்பம், பெத்து செட்டி பேட்டை, செல்வ பெருமாள் பேட்டை, லாஸ்பேட்டை கதிர்காமம், மேட்டுப்பாளையம் வரை சென்றது.

    Next Story
    ×