search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Male corpse"

    • காரைக்கால், துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காவலராக பணிபுரிபவர் ஜோதிமணி. இவர், நேற்று முன்தினம் காலை பணியில் இருந்த போது, துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, ஜோதிமணி காரைக்கால் மேடு பஞ்சாயத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நிரவி போலீசார், ஆண் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது துறைமுகத்தில் இறங்கும் போது, கால்தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பக்கிரிபாளையம் புறவழிச் சாலைஅருகில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்கில் பிணமாக தூங்கியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? இவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 53). பெயிண்டர். இவர் பெயிண்டிங் வேலை இல்லாத சமயத்தில் அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. சம்பவத்தன்று வழக்கம் போல் மீன் பிடிக்க அங்காளன்குப்பம் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த பிலவேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .
    • இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள ஆலன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்பு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றின் அருகில் அமர்ந்து இருப்பதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர் . பின்பு மீண்டும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .

    இந்நிலையில் இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திறக்கு நேரில் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,
    • அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு ஏராளமான மரங்களும், முட்புதர்களும் உள்ளன.இப்பகுதியில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூக்கில் தொங்கியவர் யார்? இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுனரா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்பெண்னை ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது.அங்கே, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர்,

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாறு உள்ளது. ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.

    இத்தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் கரையோரம் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • யார்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில், பந்தி குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 51 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்ப தாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆனந் தன் தலைமையிலான போலீ சார் பிணத்தை மீட்டு அரக் கோணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப் பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

    • பள்–ளி–பா–ளை–யம்-சங்–க–கிரி செல்–லும் சாலை–யில் தெற்கு பாளை–யம் பகு–தி–யில் அடையாளம் தெரியாத ஆண் ஒரு–வர் இறந்து கிடந்–தார்.
    • அடை–யா–ளம் தெரி–யாத ஆண் உடலை மீட்டு பள்–ளி–பா–ளை–யம் அரசு மருத்–து–வ–ம–னைக்கு அனுப்பி வைத்–தார்.

    பள்–ளி–பா–ளை–யம்:

    பள்–ளி–பா–ளை–யம்-சங்–க–கிரி செல்–லும் சாலை–யில் தெற்கு பாளை–யம் பகு–தி–யில் உள்ள வாய்க்–கா–லில் 45 வயது மதிக்–கத்–தக்க ஆண் ஒரு–வர் இறந்து கிடந்–தார். அதைப்–பார்த்த அந்த வழி–யாக வந்–த–வர்–கள் பள்–ளி–பா–ளை–யம் போலீஸ் நிலை–யத்–திற்கு தக–வல் தெரி–வித்–த–னர்.

    சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்–பெக்–டர் செந்–தில்–கு–மார் அடை–யா–ளம் தெரி–யாத ஆண் உடலை மீட்டு பள்–ளி–பா–ளை–யம் அரசு மருத்–து–வ–ம–னைக்கு அனுப்பி வைத்–தார். வாய்க்–கா–லில் இறந்து கிடந்–த–வர் வெள்ளை வேட்டி கட்டி இருந்–தார். சிவப்பு நிற பெட்–ஷீட் போர்த்தி இருந்–தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரி–ய–வில்லை? இது குறித்து வழக்–குப்–ப–திவு செய்து போலீ–சார் விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    • எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் பெரிய ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌.

    அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார் அவரை கொலை செய்து இங்கே வீசி சென்றனரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உயிரிழந்தவர் காவி நிற வேட்டியும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் காவி நிற வேட்டி யும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார். மேலும் அவர் வண்ண பூ போட்ட கம்பளி போர்வையும் போர்த்தியவாறு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஓமலூர் அரசு மருத்துவமனை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.
    • அவருக்கு கடந்த ஒருமாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.

    அவரை மீட்ட ஓமலூர் போலீசார், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கடந்த ஒருமாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில், இறந்தவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×