search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே   கிணற்றில்  ஆண் பிணம்
    X

    திண்டிவனம் அருகே கிணற்றில் ஆண் பிணம்

    • ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .
    • இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள ஆலன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 47) கோணி தைக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்பு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றின் அருகில் அமர்ந்து இருப்பதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர் . பின்பு மீண்டும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருப்பதால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .

    இந்நிலையில் இன்று ராஜேந்திரன் அமர்ந்திருந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திறக்கு நேரில் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    Next Story
    ×