search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  சங்கராபரணி ஆற்றில் இறந்த நிலையில் ஆண் பிணம்
    X

    கடலூர் அருகே சங்கராபரணி ஆற்றில் இறந்த நிலையில் ஆண் பிணம்

    • ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 53). பெயிண்டர். இவர் பெயிண்டிங் வேலை இல்லாத சமயத்தில் அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. சம்பவத்தன்று வழக்கம் போல் மீன் பிடிக்க அங்காளன்குப்பம் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த பிலவேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×