என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
    X

    விழுப்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,
    • அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு ஏராளமான மரங்களும், முட்புதர்களும் உள்ளன.இப்பகுதியில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூக்கில் தொங்கியவர் யார்? இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுனரா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×