search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    X

    அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    • ஓமலூர் அரசு மருத்துவமனை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.
    • அவருக்கு கடந்த ஒருமாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.

    அவரை மீட்ட ஓமலூர் போலீசார், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கடந்த ஒருமாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில், இறந்தவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×