search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra politics"

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.
    • பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் இரு அணியினரும் நேற்று தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி கூட்டம் நடத்தினர்.

    மும்பை பாந்திராவில் அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளித்தனர்.

    இந்தநிலையில் கூட்டத்தில் சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அஜித்பவார் பேசியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் அவரவர் இன்னிங்ஸ் இருக்கிறது. அதிக உழைக்கும் திறன் கொண்ட வயது 25 முதல் 75 வரை ஆகும்.

    2004-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பை இழந்ததற்கு சரத்பவார் தான் காரணம். அந்த ஆண்டு காங்கிரசை விட தேசியவாத காங்கிரசிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் சரத்பவார் காங்கிரஸ் கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். எங்களை பொறுத்தவரை சரத்பவார் கடவுளை போன்றவர். அவர் மீது எங்களுக்கு ஆழமான மரியாதை உள்ளது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில் கூட பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை இதற்கு உதாரணமாக பார்க்கலாம்.

    உங்களுக்கு (சரத்பவார்) தற்போது வயது 83, நீங்கள் நிறுத்தப் போவதில்லையா? எங்களுக்கு உங்களின் ஆசியை வழங்குங்கள், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அஜித்பவார் கூறினார்.

    அஜித்பவாருக்கு 63 வயது ஆகிறது. இவர் சரத்பவாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் பவாரை அரசில் இணைத்துக் கொண்டதால் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டேதான் தொடர்ந்து முதல்வராக இருப்பார் அக்கட்சி தலைவர்கள் உறுதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது.

    முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக முடிவுக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசோன கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தன.

    திடீரென கடந்த வரும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அஜித் பவார் அமைச்சரவையில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி இருந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கொடி பிடித்தனர்.

    பால் தாக்கரே சித்தாந்தம் வேறு. தேசியவாத காங்கிரஸ் சித்தாந்ததம் வேறு. ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செல்ல வேண்டும் என பால் தாக்கரே நினைத்தது கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது கட்சியான சிவசேனா எப்படி அஜித் பவார் உடன் இணைந்து செயலாற்ற முடியும்? என்ற கேள்வியை எழுப்பினர்.

    இதற்கிடையே ஒருநாள் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அஜித் பவார் கூறியிருந்தார். மேலும், அஜித் பவார் கட்சி எம.எல்.ஏ.-க்களுக்கு மந்திரி பதவி கொடுக்கும் நிலையில், தங்களது நிலை என்னவாகும் என்பதாலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக இருக்க ஆதரவு தெரிவித்தனர்.

    மகாராஷ்டிர மாநில மந்திரி ஷம்புராஜ் தேசாய் ''முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.



     


    எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

    மற்றொரு மந்திரி உதய் சமந்த் ''வர்ஷா பங்களாவில் ஏக்நாத் ஷிண்டே உடன் சிவசேனா தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது, எப்படி பணிகளை முடிக்கி விடுவது, அமைப்புகளை எப்படி வளர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்படடது.

    யார் வருகையாலும் (அஜித் பவார் குரூப் வருகை) சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மகிழ்ச்சியில்லாமல் இல்லை. ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே ராஜினிமா என்ற செய்து வதந்திகள். எம்.எல்.ஏ.- எம்.பி. தேர்தலை ஷிண்டே தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்'' என்றார்.

    மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே ''ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.


    ஆனால், ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக செயல்படுவார். அவர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்'' என்றார்.

    • அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தி.
    • சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்.

    மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, முதல்வர் இன்று அவரது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு தனது இல்லத்தில் அவசர கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று களத்தில் இறங்குகின்றனர்.
    • அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது.

    இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

    இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை நீக்கி, அவருக்கு பதிலாக மாநில தலைவராக சுனில் தட்காரேயை நியமித்தது. மேலும் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளது.

    தங்களுக்கு 40 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறிவருகிறது. இதேபோல பதவி ஏற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணியில் இருப்பதாக சரத்பவார் அணி கூறியுள்ளது. எனினும் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியாமல் உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நேற்று கூறுகையில், "அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. கட்சி உடைந்தது தொடர்பாகவும் யாரும் மனு கொடுக்கவில்லை. அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜெயந்த் பாட்டீல் மனு கொடுத்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை" என்றார்.

    அஜித்பவாருக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல சரத்பவாருக்கு ஆதரவாக ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், ரோகித் பவார், ராஜேஸ் தோபே, அனில் தேஷ்முக், பாலாசாகேப் பாட்டீல் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 15 எம்.எல். ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்குகின்றனர். இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    சரத்பவார் நடத்தும் கூட்டம் மதியம் 1 மணிக்கு ஒர்லியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அஜித்பவார் நடத்தும் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில தலைவர் சுனில் தட்காரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற உள்ள இரு அணிகளின் கூட்டங்கள் மூலம் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவர உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பலம் அதிகம் உள்ள அணிகள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே துரோகம் செய்தவர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

    தெற்கு மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட அஜித்பவார் அணியின் புதிய அலுவலகத்தில் சரத்பவாரின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேசியவாத கட்சிகள் பிளவுப்பட்டதாக எழுத்துப்பூர்வ தகவல் வரவில்லை
    • தேசியவாத கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டசபையில் அப்படியே இருக்கிறது

    மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. சரத் பவார் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களுக்குத்தான் என இருவரும் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால், பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும். மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ் இருந்து வருகிறது. தற்போது தன்பக்கம் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என அஜித் பவார் கூறியுள்ளதால் அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக கருதப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து நான் இன்னும் உறுதி செய்யவில்லை. எனக்கு முன்னால் இருக்கும் விவரங்களை பார்த்துவிட்டு, அதுகுறித்து முடிவு எடுப்பேன்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஜெயந்த் பாட்டீலிடம் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு மனுவை மட்டுமே நான் பெற்றுள்ளேன். எழுத்துப்பூர்வமாக மற்ற தலைவர்களிடம் இருந்து தகவல் பெறப்படவில்லை. கட்சி பிளவுப்பட்டதாக எந்தவொரு தகவலும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

    அஜித் பவாருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதாக தகவல் வெளியாகுவது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஏனென்றால் எழுத்துப்பூர்வமாக எனக்கு வரவில்லை. கட்சி சார்பில் சட்டமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் '' என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்து எம்.எல்.ஏ.க்கள் மூலம் சபாநாயகர் அலுவலகம் கடிதங்களை பெற்றுள்ளது. சட்டப்பூர்வமாக அவற்றை ஆராய்ந்து, அதன்பின் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

    • பிரபுல் பட்டேல் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார் சரத் யாதவ்
    • சரத் யாதவ் நியமித்த ஜெயந்த் பாட்டீலை நீக்குவதாக அஜித் பவார் குழு தகவல்

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சோதனைக்குள்ளாகியுள்ளது. நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 9 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சரத் பவார் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமை கொறடா, பிரபுல் பட்டேல் உள்ளிட்ட முக்கியமானவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதாக சரத் பவார் தெரிவித்தார். பிரபுல் பட்டேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் பவார் தலைமையில் அணி, அவர்களுக்கான குழுவை கட்டமைக்க தொடங்கியுள்ளது. சொந்த குரூப், மாநில யூனிட் தலைவர்கள், சரத் பவார் ஆதரவார்களை நீக்கும் வேலையில் இறங்கியது.

    முதன்முதலாக சரத் பவார் எதிரணி குழுவின் தலைவராக அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரபுல் பட்டேல் தெரிவித்தார். அதன்பின் மாநில தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் நியமனம் செய்த ஜெயந்த் பாட்டீலை நீக்கியுள்ளது.

    குரூப் தலைவர் என்றால் கட்சியின் தேசிய தலைவர் யார்? என அஜித் பவாரிடம் கேள்வி கேட்க ''சரத் பவார் தேசிய தலைவராக இருப்பார்'' என்றார்.

    மேலும், ''கட்சியின் பெரும்பாலானோர் எடுத்த முடிவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அவருடைய வாழ்த்தை பெற விரும்புகிறோம்'' என பிரபுல் பட்டேல் தெரிவித்தார். தற்போதைய செயலுக்கான திட்டத்தை அஜிப் பவார் தெரிவித்துள்ளார்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சட்சி சின்னம் குறித்து முடிவு செய்யும்'' என்றார்.

    மேலும், நேற்று மகாராஷ்டிர மாநில சபாநாயகரிடம் தாங்கள் நியமனம் செய்துள்ளது, நீக்கியுள்ள விவரங்களை தெரிவித்துள்ளோம். ஏற்கனவே, தலைமை கொறடாவாக இருந்த அனில் பைதாஸ் எங்களுடைய கொறடாவாக தொடர்வார். நாங்கள் என்ன நியமனம் செய்ய வேண்டுமோ, அதை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் செய்வோம்'' என்றார்.

    பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே, நரேந்திர ரதோட், விஜய் தேஷ்முக், சிவாஜி ராவ் கார்கே ஆகியோரை கட்சி பதவியில் இருந்து சரத் பவார் நீக்கி உத்தரவிட்டுள்ளார். பதவி ஏற்ற 9 பேருக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த மதிப்பும் இல்லை. கட்சி எங்களுடன் உள்ளது என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    எந்தவொரு கட்சியாலும் தகுதி நீக்கம், சஸ்பெண்ட் ஆகியவற்றை செய்ய இயலாது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் கூற செய்ய அதிகாரம் இல்லை. சபாநாயகருக்குதான் அதிகாரம் உள்ளது. இது நீண்டு நடைமுறை. சபாநாயகர் அனுமதி இல்லாமல் இது நடைபெற வாய்ப்பில்லை'' என பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.

    சட்டசபையில் சபாநாயகர் எந்த பிரிவை தேசியவாத காங்கிரஸாக ஏற்றுக்கொள்கிறாரோ? அதுவரை பிரச்சினை பூதாகரமாக வெடிக்காது. தேர்தல் ஆணையத்தை முறையிடமாட்டார்கள் எனத் தெரிகிறது.

    • பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவார் மாநில துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.

    அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு ஆதரவு அளித்து மந்திரிகளாக பதவியேற்ற 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகருக்கு இ-மெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித் பவார் உடன் 9 பேர் நேற்று மந்திரியாக பதவி ஏற்றனர்
    • தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் நேற்று மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவார், 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இனிமேல் நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சரத் பவார் ஆதரவாளர் ஜெயந்த் பாட்டீல், சபாநாயகருக்கு ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சபாநாயகர் கூறுகையில் ''9 தேசியவாத எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஜெயந்த் பாட்டீல் மனுவை பெற்றுக் கொண்டேன். அதை கவனமாக படிப்பேன். அவர் குறிப்பிட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து, அதற்குரிய நடவடிக்கையை எடுப்பேன்'' என்றார்.

    அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர் என்ற கேள்விக்கு, ''அதுபற்றி தகவல் என்னிடம் இல்லை என்ற அவர், புதிய எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது சபாநாயகரின் தனியுரிமை என்றார்.

    நேற்று தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது.

    • சரத் பவார் கிரிக்கெட்டுடன் தொடர்பு உள்ளவர் என்பதால் கூக்லி குறித்து பேசுவார்
    • தற்போது அஜித் பவார் வெளியேறியதை ஹிட்விக்கெட் என ஷிண்டே தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிர மாநில அரசியலில் நேற்று திடீர் கலகம் ஒன்று ஏற்பட்டது. சரத் பவாரின் தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அஜித் பவார், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் தன்னுடன் இருப்பதாகவும், இனிமேல் நாங்கள்தான் தேசிவாத காங்கிரஸ் என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    அரசியல் அனுபவத்தில் இந்தியாவின் தலைசிறந்தவரான சரத் பவாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் மூக்கின்மேல் கைவைத்துள்ளனர்.

    அரசியலில் எந்தவொரு சூழ்நிலையிலும் தெளிவான முடிவை எடுக்கக் கூடியவர் சரத் பவார். இவருக்கும் கிரிக்கெட்டிற்கும் அதிக தொடர்பு உண்டு. இவரது மாமனார் சுழற்பந்து பந்து வீச்சாளர். கூக்லி பந்து வீசுவதில் தலைசிறந்தவர். சரத் பவாரும் ஐசிசி தலைவராக இருந்துள்ளார்.

    இதனால் அரசியல் முடிவு எடுக்கப்படும்போது, எந்தநேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதை, கூக்லி பந்தை எப்போது வீச வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்பார்.

    2019-ம் ஆண்டு இதேபோன்று அஜித் பவார் கலகத்தை ஏற்படுத்தும்போது, துரிதமாக செயல்பட்டு அதை முறியடித்தார். அப்போது அஜித் பவாரை நம்பி ஏமாந்த பட்நாவிஸ், தங்களுடன் கூட்டணி வைக்க சரத் பவார் சம்மதம் தெரிவித்தார். அந்த நிலையில் எப்போது 'கூக்லி' பந்து வீசுவது என்பது எனக்குத் தெரியும்.

    நேற்றைய விவகாரத்திற்குப்பின் சரத் பவாருக்கு உரித்த பாணியில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார்.

    ஏக் நாத் ஷிண்டே கூறுகையில் ''இது புதிய அரசு அல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சிவசேனா- பாஜனதா அமைத்த அரசு செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன. அஜித் பவார் அதனை நம்பியுள்ளார். அதன்காரணமாக எங்களுக்கு ஆதரவு அளித்து, அரசுடன் இணைந்துள்ளார்.

    பரந்த மனதுடன் அவரையும், அவருடைய எம்.எல்.ஏ.க்களையும் வரவேற்கிறேன். அவருடனான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். இரண்டு என்ஜின் அரசு, புல்லட் ரெயில் வேகத்தில் இயங்கும். எம்.வி.ஏ. அரசு உடைந்து விட்டது. சிலர் கூக்லி, க்ளீன் போல்டு குறித்து பேசி வருகிறார்கள். ஆனால், க்ளீன் போல்டு... அதுவும் ஹிட் விக்கெட் என்பதை எல்லோரும் பார்த்து இருப்பார்கள்'' என்றார்.

    • சரத் பவார் அண்ணன் மகன் அஜித் பவார் நேற்று மகாராஷ்டிரா அமைச்சரவையில் இணைந்தார்
    • தன்னுடன் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதால், சரத் பவாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

    சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு கலகத்தை உண்டாக்கி, நேற்று ஏக் நாத் ஷிண்டேவின் மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    மொத்தம் 53 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் இருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் என்னும் குறிப்பிட்டுள்ளார்.

    இது சரத் பவாருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. தன்னுடைய சொந்த அண்ணன் மகனே துரோகம் செய்துள்ளார். கட்சியின் நிலை என்ன? என்பது குறித்து அவர் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அஜித் பவார் துரோகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சரத் பவார் ''குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. குடும்பத்திற்குள் அரசியல் குறித்து விவாதிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்களது தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள்'' என்றார்.

    சரத் பவார் இன்று காலை சுதந்திர போராட்ட வீரரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.பி. சவான் நினைவிடத்திற்கு செல்கிறார். புறப்படும் முன் ''நான் இதுவரை யாரையும் அணுகவில்லை. நேற்றில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தற்பேது சதாரா செல்கிறேன்'' என்றார்.

    • 40 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தகவல்
    • கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே கட்சி உடைக்கப்படடு ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார்

    மகாராஷ்டிர மாநில அரசில் நேற்று திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இருந்து மகாராஷ்டிர மாநில அரசின் நகர்வுகளை பார்த்தோம் என்றால், ஸ்திரதன்மையற்ற நிலை என்றே கூறலாம்.

    சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மையை பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பிடித்தது.

    என்றாலும் உத்தவ் தாக்கரே தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என அடம்பிடித்ததால் சிக்கல் நீடித்தது. இறுதியில் அஜித் பவார் துணையுடன் பா.ஜனதாவின் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் சர்த் பவார் அப்போது அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்வதை தடுத்து 60 மணி நேரத்திற்குள் பட்நாவிஸை ராஜினாமா செய்ய வைத்தார்.

    அதன்பின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்தன. இந்த கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறிவந்த பா.ஜனதா, எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட திட்டமிட்டது.

    இதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாய்ப்பு கிடைத்தது. உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். உத்தவ் தாக்கரேயின் கட்சி உடைந்தால் போதும் என்று நினைத்த பா.ஜனதா துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.

    சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது அடுத்த ஸ்ட்ரைக். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது.

    53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனவும் தெரிவித்துள்ளார். சரத் பவார் சட்டப்போராட்டம் நடத்தினாலும் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 41 இடங்களை பிடித்தது. தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேரும் நிலை உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளது.

    பா.ஜனதாவுக்கு அதிக இடங்களை பெற்றுத்தரும் ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பல இடங்கள் பறிபோனால் என்னவாகும் என்பதை யோசித்த பா.ஜனதா அதற்கு பின்னால் இருந்து வேலை செய்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 27.84 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. சிவசேனா 23.5 சதவீதம், தேசியவாத காங்கிரஸ் 15.66 சதவீதம், காங்கிரஸ் 16.41 சதவீதம். இந்த மூன்று கட்சிகளின் சதவீதம் 45-ஐ தாண்டும்.

    அதனால் கட்சிகளை துண்டு துண்டாக்கினால் வாக்குகள் பிரிந்து அது தங்களுக்கு சாதகமாகும் என கணக்கு போட்டிருக்கலாம்.

    கடந்த சில நாட்களுக்கு முன், 2019-ல் பா.ஜனதா ஆட்சியமைக்கு ஆதரவு தருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சம்மதம் தெரிவித்தார் என பட்நாவிஸ் தெரிவித்திருந்தார். அதற்கு எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும். கூக்லி வீசுவதற்கான நேரம் தனக்கு தெரியும் என்று சரத் பவார் பதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் நேற்று பதவியேற்றார்.
    • இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரிடம், தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம்.

    அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம். இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கட்சியை விட்டுச் செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது.

    அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

    ×