search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Shivratri"

    VLR0418022023: ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண

    ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுவதால் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டுவந்து காளகஸ்தி கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

    ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • “ஓம் நவசிவாய” என்ற மந்திர உச்சரிக்கவேண்டும்.
    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.

    இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    மகாசிவராத்திரி வழிபாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக்குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5.எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6.வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

    வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.

    ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக்கொண்டும் பூஜிக்கலாம்.

    பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அன்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

    சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று இரவு சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    • ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் தமிழகத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகராக கருதப்படும் இங்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்.

    மகா சிவராத்திரியான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ராமநாதசுவாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் படிக லிங்க பூஜை நடந்தது.

    சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் ஏராளமானோர் நீராடினர். காலை 9 மணிக்கு கேடயத்தில் நடராஜர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

    இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்துள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்க கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இன்று முதல் 21-ந்தேதி வரை மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சதுரகிரிக்கு செல்வதற்காக நேற்று இரவு முதலே மலை அடிவார பகுதியான தாணிப்பாறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை 6 மணிக்கு வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.

    முன்னதாக பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. மாலை பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலிப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆனால் பக்தர்கள் இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

    • அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.
    • ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி அணிந்திருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடந்தது.

    முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி அணிந்திருந்தனர். கையில் பனை ஓலை விசிறி விபூதி பொட்டலத்துடன் பக்தர்கள் ஓட தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீல கண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு மகா தேவர் கோவில், திருப்பன்றி கோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்தனர். நேற்று இரவு விடிய விடிய பக்தர்கள் சிவாலயங்களில் தரிசனம் மேற்கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களிலும் வேன்களில் சென்று தரிசனம் செய்தனர்.

    சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தை நடை பயணமாக சென்றும் ஒடி சென்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வழி நெடுகிலும் உணவு வகைகள் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பக்தர்கள் இன்று இரவு சிவாலயங்களில் தங்கி கண் விழித்து வழிபாடு செய்வார்கள். அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.

    சிவராத்திரியையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. * * * மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் இன்று காலை திருவிடைமருதூர் மகாதேவர் கோவிலில் தரிசனம் முடித்து செல்வதை படத்தில் காணலாம்.

    • நான்கு ஜாமங்களுக்கும் நான்குவிதப்படி படையல் படைக்க வேண்டும்.
    • சிவாலயம் சென்று பரமேஸ்வரனை வழிபட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    அபிஷேகம் முடிந்தபிறகு சிவலிங்கங்களைச் சுத்தமான உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். பிறகு சந்தனம், குங்குமம் சார்த்தி அட்சதை முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நான்கு ஜாமங்களுக்கும் நான்குவிதப்படி படையல் படைக்க வேண்டும்.

    முதல் ஜாமத்தில் அரிசியை படைத்து, பிறகு சதபத்திரம், தாமரை, வில்வம் போன்றவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    மூன்றாம் ஜாமத்தில் கோதுமையைப் படைத்து, ஆத்தி, அருகு போன்றவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, கேதுமை, பயறு, தினை, கடலை பருப்பு போன்ற ஏழுவகை தானியங்களை அட்சதையாகப் படைத்து நறுமணம் வீசும் மல்லிகை, கொன்றை மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்ய வேண்டும்.

    சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யும்போது கீழ்க்கண்டபடி பண்டங்களைப் படைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும் கூடவே வில்வப் பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும்.

    இரண்டாம் ஜாமத்தில் லட்டு போன்ற பண்டங்களையும் கூடவே பலாப்பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும்.

    மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம் கூடவே மாதுளை பழத்தையும் எல்லா வகைக் கனிகளையும் நிவேதனம் செய்து வணங்க வேண்டும்.

    ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் மந்திரம் ஓதும் வேதியர்களுக்கு தட்சணை முதலியன அளித்து அன்னமும் வழங்க வேண்டும். அதுபோல் தன்னால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். அஷ்ட மந்திரங்களால் வழிபட்டு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து தன்னுடைய வேண்டுதலை இறைவனிடம் கூற வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகும் அன்றைய தினத்தை வீணாக்காமல் சிவபெருமானின் புண்ணியக் கதைகளைக் கேட்டோ, சிவநாம கீர்த்தனைகளைப் பாடியோ, கேட்டோ பொழுதைக் கழிக்க வேண்டும். பொழுது விடிந்ததும் நீராடி நித்தியக் கடன்களை முடித்தபின் ஏதேனும் ஒரு சிவாலயம் சென்று பரமேஸ்வரனை வழிபட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு மாத சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து பூஜை செய்து மறுவருடம் மகாசிவராத்திரி அன்று விரதத்தை உத்தியாபனம் செய்து நிறைவு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி விரதத்தை நிறைவு செய்யும் நாளில் வீட்டிலேயே சிறு அலங்கார மண்டபம் செய்ய வேண்டும். அதில் பார்வதி சமேதராக பரமேஸ்வரனைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வேண்டும். ஹோமம் வளர்த்து முதலில் நவக்கிரக சாந்திக்காக நவக்கிரக ஹோமம் செய்யவும். பின்னர் நெய், பாயசம் முதலியவை கொண்டு ருத்திர மந்திரம் ஓதி, ஹோமம் செய்ய வேண்டும்.

    பூஜை முடிவுறும் தருவாயில் பொன்னால் சிவபெருமானுடையதும் வெள்ளியால் பார்வதியுடைய பிரதிமைகளைச் செய்து சிறிய தட்டில் வைத்து வேதியருக்குத் தானம் செய்ய வேண்டும். வேதியர்களுக்குப் புத்தாடை போன்றவை தர வேண்டும். வேதியர்க்கு அன்னதானமும், பசு தானமும் செய்யலாம் குறைந்த பன்னிரண்டு நபர்களுக்கேனும் அன்னமளிக்க வேண்டும்.

    மறுநாள் அமாவாசை நாளில் பித்ருக்களுக்குப் பிண்டப் பிரகடனம் செய்து வேதியர்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும். விரைவில் இதற்கான பலன் கிடைக்கும் என்பது திண்ணம்.

    • 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
    • இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும் அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். எனவே பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று வழிபாடு நடத்தலாம்.

    சிவராத்திரி விழாவையொட்டி இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேசுவரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதன்பின்னர் சனிபிரதோஷ வழிபாடு 4.45 மணிக்கு மேல் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு மகாசிவராத்திரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.

    அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளிறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    அதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவில், நேதாஜி ரோடு முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் குலதெய்வ வழிபாட்டிற்காக நகர் மற்றும் புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    • இன்று மாலை ஈசான்ய மைதானத்தில் தொடங்குகிறது.
    • இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலகபிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். அதன்படி கோவிலில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும்.

    மகா சிவராத்திரி விழாவை அனைத்து சிவன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு முதல் முறையாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு ஓதுவார்கள் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களின் திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    7.30 மணிக்கு புதுவை சுரேஷ் குழுவினரின் கயிலாய வாத்திய நிகழ்ச்சியும், 8 மணிக்கு ஜெகத்லயா குழுவினர் மற்றும் சகானா அகாடமி குழுவினர், தில்லை ஸ்ரீசிவகாமி மாதங்கி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 9 மணிக்கு கலைமாமணி துறையூர் முத்துக்குமார் குழுவினரின் சாமியாட்டமும், 9.25 மணிக்கு சிவனடியார்கள் பெரிதும் சிந்தை மகிழ்வது மக்கள் தொண்டிலா, மகேசன் தொண்டிலா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு செம்பருத்தி கலைக்குழு, பரமசிவம் குழுவினரின் நையாண்டி மேள நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு பினேஷ் மகாதேவன் குழுவினரின் நாட்டிய நாடகமும், அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல் மின்னல் மூர்த்தி குழுவினர் வழங்கும் தப்பாட்டம் நிகழ்ச்சியும், 2 மணிக்கு சக்தி குழுவினரின் நாத சங்கமம் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் அபிலாஷ், அனிருத், ரேஷ்மா, ஷியாம், தன்யஸ்ரீ ஆகியோர் வழங்கும் இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
    • சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

    2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

    3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

    6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

    11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் 'சங்கர - நாராயண' வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் 'பாண லிங்கம்' இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

    20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    • அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும்.
    • தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும்.

    ராத்திரி என்ற பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும்.

    இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.

    அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த ராத்திரி மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை.

    உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழு முதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமாதேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

    சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவராத்திரி மகிமை கூறப்படுகின்றது.

    சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும்.

    முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

    முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது.

    அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது.

    மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச் சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவதையும் குறிக்கும்.

    நான்காவதாக செய்ய வேண்டியது தீபம் ஏற்றுதல், இல்வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து முழுதிருப்தி அடைய முடியும்.

    சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைச்சு மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.

    மறுநாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்துச் சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவசிந்தனையோடு கோவிலுக்குப் போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை. இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

    அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி 14 நாழிகையான லிங்கோத்பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

    தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுகிறது? சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

    வெண்பொங்கல், வடை, அன்னம், தோசை போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும். சிவனுக்கு மிகவும் விருப்பமானது வில்வம், விலக்க வேண்டியது தாழம்பூ. மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இதனை தொடர்ந்து தங்கத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை 6 கால பூஜைகள் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு ருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.

    மகா சிவராத்திரி யொட்டி நாளை மாலை முதல் விடிய விடிய பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுகின்றனர்.

    கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் பக்தி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோட்டை வளாகத்தில் மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    • நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.
    • தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன்.

    ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகொண்டே இருந்தது. தேவர்கள் எல்லோரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம். பின்னர் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப சுலபம் என்று பிரம்மா வழி சொன்னார்.

    திருமாலிடம் அனுமதி வாங்கி விட்டு மந்திரமலையை மத்தாக்கினார்கள். சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினார்கள்.

    மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார். அமுதம் உண்ணப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேகவேகமாக கடைந்தார்கள்.

    வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது. அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது. இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிவிட்டது. விஷத்தின் வீரியம் தாங்க முடியாமல் அவர்கள் சிவனிடம் போய் முறையிட்டார்கள். நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.

    தேவர்களை காப்பதாக உறுதியளித்தான். சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான். சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனி போல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார். தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன். அன்னை சக்தி பதறிப்போனாள்.

    உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்து விடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார்.

    அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.

    அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.

    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய நமது துன்பம் அகலும்.
    • நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

    சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.

    சிவனை 'அபிஷேகப்பிரியன்' என்றும் சொல்வார்கள். அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம். சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன். அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும்.

    அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

    ×