search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Shivratri"

    • சோழவந்தான் பகுதியில் மகா சிவராத்திரி விழா வழிபாடு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவில் உள்ள சப்பாணி கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் முதல் வாரம் காப்பு கட்டி, விரதம் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மகாசிவ ராத்திரி அன்று வைகை ஆற்றுக்கு சென்று சாமி பெட்டியுடன் கரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. வைத்தியநாதபுரம் அம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வயல்காட்டுக்கு சென்று சாமி பெட்டி எடுத்து கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.

    புட்டு விநாயகர் கோவிலில் 4 கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடைபெற்றது. இங்குள்ள கருப்பசாமிக்கு 12 வாசனை பொருட்களை கொண்டு அபிஷே கம், சிறப்பு பூஜை கள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பிரளய நாத சுவாமி கோவிலிலும் 4 கால பூஜை நடைபெற்றது. இதில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதப்பை வழங்கினர்.

    மேலரதவீதி அங்காள பரமேஸ்வரி சமேத வாலகுரு நாதன் கோவில், வைகை ஆற்றங்கரையில் உள்ள சாலை கருப்பண்ணசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருவேடகம் ஏடகநாதர் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், முதலைக் குளம் கம்ப காமாட்சி அம்மன் கருப்புசாமி கோவில், விக்கிரமங்கலம் கருப்பு கோவில், காடுபட்டி கோவில் வயக்காட்டு கருப்புசாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ள்பட பல்வேறு துறை பிரபாங்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    ஈஷா மையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். ஆதியோகி சிலை முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மகா சிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நடை திறந்திருந்தது. இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்ததால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    சிவராத்திரியையொட்டி நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.

    • மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • சிவன் கோவிலில் விடிய விடிய கண்விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்களிலும் நடைபெறும்.

    சேலம்:

    மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். சிவன் கோவிலில் விடிய விடிய கண் விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்க ளிலும் நடைபெறும்.

    மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும்.

    மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்தி ருக்கும். வழக்கமாக அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடிய விடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.

    முதல் காலத்தில் பிரம்மன் சிவனை பூஜிப்ப தாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும். கடன் தொல்லை நீங்கும்.

    2-ம் காலத்தில் பெருமாள் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். அப்போது சிவனை வழிபட வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 2-ம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. சகல பாவங்களும் நீங்கும்.

    3-ம் காலத்தில் பூஜையை அம்பிகையே செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த காலத்தில் வழிபாடு செய்தால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

    4-ம் காலத்தில் தேவர்க ளும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்க ளும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்ப தாக ஐதீகம். இவனால் இறைவன் சங்கடங்கள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை மகா பிரதோஷ நாளில் வருவது இன்னும் சிறப்பு. வழக்கமாகவே மகா சிவ

    ராத்திரியின்போது சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் சிவாலயங்கள் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சிவ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சுகவனே சுவரர் கோவிலில் நடை பெறும் பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தாரமங்கலம் கைலாச நாதர், நங்கவள்ளி சோமேஸ்வரர், உத்தமசோழ புரம், கரபுரநாதர் கோவிலில் இன்று (சனிக்கி ழமை) பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். அம்மாப்பேட்டை மாதேஸ்வ ரர் கோயில், அமரகுந்தி சொக்கநாதர் கோயில், அரசிராமணி சோளீஸ்வரர் கோயில், ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில், பேரூர் பசுபதீசுவரர் கோயில், ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்திஸ்வரர் கோயில், கருப்பூர் கைலசநாதர் கோயில், கொங்கணாபுரம் உலகேஸ்வர சுவாமி கோயில், சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோவில்,

    கோனேரிப்பட்டி அனந்தஈஸ்வரர் கோயில், பாலமலை சித்தேஸ்வரர் கோயில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில், பெரிய சோரகை பரமேஸ்வரன்சுவாமி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், மேட்டூர் அணை மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டாபுரம் காசிவிஸ்வநாதர் கோயில், ஆனங்கூர் சக்தீஸ்வரர் கோயில், கூடச்சேரி சோழீஸ்வ

    ரர் சுவாமி கோயில், கொல்லி மலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொளங்கொண்டை சீர்காழிநாதர் கோயில், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு கைலாசநா தர் கோயில், பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில் பள்ளிபாளையம் அக்ரஹரம் விஸ்வேஸ்வ ரர்சுவாமி கோயில், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வ நாதர் கோயில், ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வெண்ணந்தூர் தீர்த்த கீரீஸ்வரர் கோயில், வையப்பமலை இடும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களி லும் இன்று சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது.

    • கோவில் வளாகத்தில் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
    • பட்டிமன்றம், சிவதரிசனம், நாட்டிய சங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

    மகா சிவராத்திரி விழா இன்று சிவன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள விளையாட்டு மைதானத்தில், இன்று மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமுறை விண்ணப்பத்துடன் மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது.

    விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 6.45 மணி முதல் கயிலை வாத்தியம், யோகா சிறப்பு நிகழ்ச்சி, கிராமிய இசை நடனம், கதக் நடனம், சிவதாண்டவ துதி, பட்டிமன்றம், சிவதரிசனம், நாட்டிய சங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

    கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 5-வது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 24-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி நாளை (19-ந்தேதி) பால்குட ஊர்வலம், பால் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி புறப்பாடு, இரவு 10 மணிக்கு கும்பம் இடுதல் நடைபெற இருக்கிறது.

    வடபழனி முருகன் கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அதன்பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்தில் ஒரு கால பூஜை என தொடர்ந்து 4 கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாகை முகுந்தன் சொற்பொழிவு, பாணிஷ் மாணவர்கள் சுலோக பாராயணம், பேபி தியாவின் பக்தி இசை, கணேஷின் நாமசங் கீர்த்தனம், அபிஷேக் குழு வினர் பக்தி பாடல்கள், சிவசுப்பிரமணிய பாகவதர் குழுவினரின் பஜனைகள் நடக்கின்றன.

    சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தமும், வில்வ இலையும், கண்டமணி ருத்ராட்சமும் வழங்கப்பட உள்ளது. இன்று இரவு கோவிலுக்குள் 6 கால பூஜையும், கோவில் வளாகத்தில் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசாமி கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில், பாடி திருவல்லீசுவரர் கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

    • சிவபுராணத்தில் எத்தனையோ கிளைக் கதைகள் உள்ளன.
    • சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை இது.

    அக்காலத்தில் மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோவிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோவில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலை உயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான்.

    பின்னர், மாறு வேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத் துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கி கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன.

    பதுங்கி கொண்டிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், வயிற்று பசிக்கு உணவுமில்லாமல் உறக்கமும் இல்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். நடு நிசியில், மகாசிவராத்திரியில் சிவதரிசனம் கண்டு மக்கள் இறைவனை துதித்து மகிழ்ந்தனர். விடியற் காலையில் சம்பகன் கோவிலை விட்டு வெளியேறி, காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சை எடுத்து உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிரும் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்து சென்றனர்.

    எமதர்மன் தன் அமைச்சரான சித்ர குப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறு பற்றிக்கேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறிவிட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசி காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.

    சம்பகன் அவனையும் அறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.

    • சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.
    • இன்று சிவபெருமானை வழிபாடு செய்வது புண்ணியம் தரும்.

    சென்னையில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன. அவற்றுள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பு திருமயிலை எனப்படும் மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவேற்காடு, திருவலிதாயம் (பாடி), திருமுல்லைவாயல் ஆகிய 6 தலங்கள் பெற்றுள்ளன. மகா சிவராத்திரி தினத்தன்று இந்த 6 தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும், பலன்களையும் தரும்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 6 சிவாலயங்களிலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையில் வந்து வழிபாடு நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு முழுக்க தங்கி இருக்கும் போது தேவைப்படும் குடிநீர் வசதி உள்பட எல்லா வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    சிவராத்திரி தினத்தன்று சிவால யங்களுக்கு வரும் சிவபக்தர்களுக்கு அன்ன தானம் கொடுப்பது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும். வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

    அன்னதானம் செய்ய இயலாதவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இரவு கண் விழித்திருக்கும் பக்தர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் கொடுத்து உபசரிக்கலாம். இதற்காக சிவாலய நிர்வாக அதிகாரிகளிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது. சிவ பக்தர்களுக்கு செய்யும் உதவியானது, மிக எளிதாக சிவன் அருளைப் பெற்றுத்தரும் என்பது ஐதீகம்.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது உகந்தது.

    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.

    (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோவிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

    சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

    • விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.
    • சிவராத்திரி வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

    2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    • ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும்.
    • பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும். சிவராத்திரிக்கு முந்தைய மாலை நேரத்தில் நடராஜ மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோவிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தனையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.

    1. இரவின் முதல் காலம்:- (ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்ச கவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

    2. இரண்டாம் காலம்:-தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யசூர் வேதம் ஓத வேண்டும்.

    3. மூன்றாம் காலம்:- லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவர் உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

    4. நான்காம் காலம் :- சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திருநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது.

    இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    • சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.
    • சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது.

    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

    விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.

    தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

    இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிகஉயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.

    சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    'அந்த காலத்தில் ராமபிரான் வனவாசம் செய்த தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் இருந்த பொய்கைக்குக் கலசரஸ் என்று பெயர். அந்த குளத்தின் கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் வித்வஜிஹ்மர்.

    அவரைப் பார்க்க கவுஸ்திமதி என்ற ரிஷி வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.

    'இந்தச் சிறிய வயதில் நீங்கள் துறவியாக இருப்பது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களுடைய சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்' என்று வித்வஜிஹ்மரிடம் கேட்டார்.

    'சம்சாரங்கர பந்தத்தில் அகப்பட்டு என்னுடைய வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தை என்று கஷ்டப்பட விரும்பாமல் தானே நானே என்னுடைய அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்கிறேன். ஆனாலும் என்னுடைய கர்மா விடவில்லையே என்றார் வித்வஜிஹ்மர்.

    'நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்! நம்மைப்படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    உங்களின் பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோடு என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவர்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி.

    அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

    அதற்கு 'மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா? அவர்கள் ஏன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்தார்கள்?. அதற்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார் வித்வஜிஹ்மர்.

    கவுஸ்திமதி முனிவர் தன்னுடைய தவ வலிமையைப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.

    அதற்கு நாராயணன் 'நாரதனும் ஒருசமயம் என்னுடைய மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின் எனும் ஒருத்தியோடு கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கிறான். ஸ்ரீமதியுடைய சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.

    அதே போல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனுடைய சாபத்தை பெற்றிருக்கிறார்கள். காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பது கடினம் என்று அவர்கள் ஒருநாளும் நினைக்கவில்லையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.

    துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான 5 மந்திரங்களைத் தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா? மகாலட்சுமியுடைய கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம் என்று பிரம்மா நினைத்தார்.

    லட்சுமி இதை விரும்பாத காரணத்தினால் நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்' என்று போய் ஜிஹ்மரிடம் சொல், அவர் வசுமதியைக் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்வார் என்று சொல்லி அனுப்பினார்.

    பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மரிடம் அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது.

    கவுஸ்திமதி ரிஷி, மகளை விட்டுப் பிரியும் போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார். வித்வ ஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.

    அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராக பாத்திருக்கிறாள்.

    சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    • வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.
    • சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினைப் பெறலாம். சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும். எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    10 ஆயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும். திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபர சுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சொர்கக நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்க சொரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினை பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும். ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.

    மாதுளை- அரச பதவி கொடுக்கும்

    நெய்- மோட்சத்தைக் கொடுக்கும்

    அன்னம்- வயிற்று நோயை நீக்கும்

    நெல்லிக்கனி- பித்தம் நீக்கும்

    பழரசங்கள்- வறட்சியைப் போக்கும்

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல உண்டு.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற்படும். நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும். தேன், வியாதி களை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.

    ×