search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishna water"

    • தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.
    • பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 25.71அடி ஆக பதிவாகியது. 947 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 588 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் சென்று கொண்டிருந்தது.

    மழைநீர் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2.105 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்காக திறந்து விடப்பட்ட 385 கன அடி தண்ணீர் இன்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து கொண்டு இருக்கிறது. #PoondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் 10-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

    இதைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு பூண்டி ஏரிக்கு தண்ணீர் சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு 10 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 385 கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி.. இதில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியில் நீர் மட்டம் 20.21 அடியாக பதிவானது. 209 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த 11-ந் தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 18.81 அடியாக இருந்தது. 152 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கிருஷ்ணா நதி கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 5 நாட்களில் ஏரியின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்துள்ளது.

    கண்டலேறு அணையில் தற்போது 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 8 டிஎம்சி இருப்பில் வைத்து கொண்டு மீதி தண்ணீரை திறந்துவிட உத்தேசித்து இருப்பதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PoondiLake
    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடையும்.
    ஊத்துக்கோட்டை:

    பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி கடந்த மாதம் ஜதராபாத்தில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதேபோல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்து விட்டது.

    முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் நேற்று மாலை 4.30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

    பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சுப்புராஜ், உதவி பொறியாளர்கள் சண்முகம், சதீஷ்குமார், பழனிகுமார், பிரதீஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    இந்த நீர் இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடைய வாய்ப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியை நோக்கி 39 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் அளவு படிப்படியாக அதிகரிக்கும். கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன்பின் இணைப்பு கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி முதல் தவணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது’ என்றார்.

    ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாயிண்டுக்கு இன்று இரவு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Krishnawater
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன.

    4 ஏரிகளில் மொத்தம் 949 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம்).

    இந்த தண்ணீரை வைத்து இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதேபோல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெல் பயிர்களை காப்பாற்ற கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திர விவசாயிகளும் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணா தண்ணீர் ஆந்திர மாநிலம் சத்யவேடு அருகே வந்து கொண்டு இருக்கிறது. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாயிண்டுக்கு இன்று இரவு கிருஷ்ணா நீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பூண்டி ஏரியை தண்ணீர் நாளை காலை சென்றடையும். தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது வெறும் 166 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 1,540 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. #Krishnawater


    கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

    இதே போல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்து வேகமாக வறண்டு வருகின்றன.

    இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது வெறும் 949 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    இதையடுத்து மாற்று வழியில் தண்ணீரை பெறும் நடவடிக்கையை குடிநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் 9-ந் தேதி ஜதராபாத்தில் நடந்த கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர விவசாயிகளும், ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நேற்று காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் பூண்டி ஏரியை நோக்கி பாய்ந்து வருகிறது.

    இன்று காலை 6 மணிக்கு கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஆந்திர விவசாயிகள் சாகுபடி செய்ய தண்ணீர் எடுத்த பின்னர் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் வர உள்ளது. கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 3 நாட்களில் தமிழக எல்லையை கிருஷ்ணா தண்ணீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

    கிருஷ்ணா தண்ணீர் திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

    மேலும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும். தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உட்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரப்பு குறைந்து உள்ளது. பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பபாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்.

    இந்த ஏரிகளில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சில நாட்களுக்குதான் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஜதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விட முடியாத என்று ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பருவ மழை பெய்யும் என்ற நோக்கத்தில் நெற்பயிரிட்டனர். ஆனால் மழை பொய்த்து போனதால் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கால்வாய் வழியாகதான் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்துவரும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு இன்று காலை கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கும் வந்து சேருகிறது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இன்று காலை வெறும் 949 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்த தருணத்தில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு ஆறுதல் தரும் வி‌ஷயமாகும்.

    கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் பூண்டி ஏரிக்கு செல்லும்.

    பூண்டி ஏரியில் 3321 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 172 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஆண்டு 3.88 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது.

    இதற்கிடையே தற்போது கண்டலேறு அணையில் 11.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டிஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது. கண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 300 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

    கிருஷ்ணா குடிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    முதல் தவணையில் ஜனவரி முதல் மார்ச் வரை 1.256 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. தற்போது கடந்த மாதம் 29-ந் தேதியிலிருந்து நேற்று காலை 6 மணி வரை 1.599 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.54 அடியாக பதிவானது. 782 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு வெறும் 56 கனஅடி தண்ணீர் மட்டும்தான் வந்து கொண்டிருந்தது. பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் இணைப்பு கால் வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 18 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

    கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இன்று காலை வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக இருந்தது. வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் இருந்தது.

    தற்போது கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 19.98 அடியாக பதிவாகியது. 249 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது

    கிருஷ்ணா நதி நீர் வரத்து தற்போது வருவது போல் தொடர்ந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.

    கண்டலேறு அணையிலிருந்து நேற்று மாலை முதல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. #Krishnawater #Poondilake
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு வருடந்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கபட்டு மார்ச் 26-ந்தேதி நிறுத்தப்பட்டது.

    இந்த காலத்தில் 2. 253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இந்நிலையில் நீர் வரத்து இல்லாததாலும், கோடை வெயில் காரணத்தாலும் பூண்டி ஏரியில் இருப்பு இருந்த தண்ணீர் வறண்டு விட்டது.

    இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து 2-வது தவணையாக ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

    ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

    இந்நிலையில் இம்மாத முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட்டனர். இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 350 கன அடியாக உயர்த்தினர்.

    இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட் வந்தடைந்தது. வினாடிக்கு 75 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

    இந்த நீர் 25 கிலோ மிட்டர் தூரம் பாய்ந்து இன்று அதிகாலை பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் சென்றடைகிறது.

    இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நேற்று மாலை முதல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு இன்று காலை முதல் வினாடிக்கு 352 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் 19 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. யாகும். இன்று காலை நிலவரப்படி 12 . 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #Krishnawater #Poondilake


    கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது. #Krishnawater
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜனவரி 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட காலத்தில் 2. 253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் நீர்வரத்து இல்லாததாலும், கோடை வெயில் காரணத்தாலும் பூண்டி ஏரியில் தண்ணீர் முற்றிலும் வறண்டு விட்டது.

    இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையாக ஜூலை மாதத்தில் கண்ட லேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

    ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே இம்மாத முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பிதால் உபரி நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட்டனர்.

    இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக உயர்த்தினர்.

    இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது.

    வினாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹென்ரி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர்கள் சுப்புராஜ், அரசு, அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் பிரதீஷ், பழனிகுமார், சதீஷ், பழனிகுமார், சண்முகம் ஆகியோர் மலர் தூவி கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர்.

    இந்த நீர் 25 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 13 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணை தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #Krishnawater

    கோடை வெயில் காரணமாக கால்வாய் வறண்டு உள்ளதாலும், தண்ணீரின் வேகம் குறைந்து இருப்பதாலும் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரியை அடைய தாமதமாகிறது. #Krishnawater
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த 3 மாதத்துக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது.

    இதேபோல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆந்திர அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதிநீர் பிடிப்புகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீசைலம் அணை முழுவதும் நிரம்பியது. அங்கிருந்து சோமசிலா அணைக்கு நீர் திறக்கப்பட்டது. அதுவும் நிரம்பியதால் கண்டலேறு அணைக்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. முதலில் 300 கன அடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து 2 நாட்களாக 300 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் பாய்ந்து வரும் வேகம் குறைந்துள்ளது.

    கண்டலேறு அணை - பூண்டி ஏரி இடையே 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் வர கால்வாய் உள்ளது. கோடை வெயில் காரணமாக கால்வாய் வறண்டு உள்ளதாலும், தண்ணீரின் வேகம் குறைந்து இருப்பதாலும் இன்று காலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே கிருஷ்ணா நீர் வந்துள்ளது.

    ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கிருஷ்ணா நீர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களில் 22 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தண்ணீர் அடைந்து இருப்பதால் பூண்டி ஏரியை சென்றடைய மேலும் கூடுதல் நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Krishnawater

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் தமிழக எல்லைக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரியில் தேக்கப்படும்.#Krishnawater

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கியமானதாக உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு தேவைப்படும் போது சென்னை குடிநீருக்கு திறந்து விடப்படுகிறது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் இருந்த தண்ணீர் பெருமளவு வறண்டு விட்டதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    ஜூலை மாத தவனையின் படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால்போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் கிருஷ்ணா நதி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியது.

    அங்கிருந்து சோமசிலா அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஸ்ரீசைலத்திலிருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது 300 கனஅடி தண்ணீர்திறந்து விடப்படுகிறது. இதனை படிப்படியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 10 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கோடை வெயிலால் கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பாயும் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரம் வரைதான் தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    கண்டலேறு-பூண்டி இடையே தூரம் 177 கிலோ மீட்டர் ஆகும். இதன்படி பார்த்தால் கிருஷ்ணா நதி நீர் இந்த வார முடிவில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. தமிழக எல்லையில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்ல கூடுதலாக மேலும் ஒருநாள் ஆகும்.

    கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தாலும் உடனடியாக சென்னைக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நீர் வந்ததும் நீர் மட்டம் குறைந்தது 30 அடியாக உயர்ந்த பின்னரே பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். #Krishnawater

    ×