search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jiiva"

    ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். #Jiiva #ArulnidhiTamilarasu #ManjimaMohan
    கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் `தேவராட்டம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் அடுத்ததாக ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

    ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கவுள்ளார்.

    நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார். இரண்டு கதாநாயகர்களில் மஞ்சிமா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 13-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. #Jiiva #ArulnidhiTamilarasu #ManjimaMohan

    சமீபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் நடிகர் ஜீவா இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார். #Karunanidhi #Jiiva
    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



    இந்த நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய்,  நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். தற்போது நடிகர் ஜீவா கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். #Karunanidhi #Jiiva
    தமிழ்ப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான திஷா பாண்டே, தற்போது காமெடியுடன் கூடிய திகில் படத்தில் நடித்து வருகிறார். #DishaPandey
    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் அறிமுகமானவர் திஷா பாண்டே. தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம் 2’வில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தார். இவர் அடுத்து காமெடி நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கொம்பு என்ற படத்தில் நடிக்கிறார். 

    திகிலுடன் நகைச்சுவையான படமாக உருவாகி வரும் ‘கொம்பு’ படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் அதற்கான தீர்வுகளையும் பற்றி பேசுகிறது என்கிறார் இயக்குனர் ஈ.இப்ராகிம்.

    ஜீவா, திஷா பாண்டேவுடன் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். எம்.பன்னீர்செல்வம், பி.வானதி தயாரிப்பில் தேவ்குரு இசை அமைக்க சுதீப்பின் ஒளிப்பதிவில் உருவாகி உள்ளது கொம்பு திரைப்படம்.
    கீ, ஜிப்சி, கொரில்லா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் ஜீவாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். #Jiiva
    ஜீவா நடித்த கீ படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அவர் கையில் ஜிப்சி, கொரில்லா என 2 படங்கள் உள்ளது. தனது சினிமா வாழ்க்கை பற்றி ஒரு பேட்டியில் கூறிய ஜீவா, என்னை மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட விரும்பவில்லை.

    காதல், ஆக்‌‌ஷன், சென்டிமென்ட், கருத்து சொல்லும் படம் என்று எல்லாவிதமான படங்களும் பண்ணி இருக்கிறேன். அதில் பல நல்ல படங்களும் இருக்கு என்று நம்புகிறேன்.

    நான் பெரிய நட்சத்திரம் கிடையாது. அதே நேரத்தில் மோசமான படங்கள் பண்ணும் நடிகரும் கிடையாது. இப்போதைய சூழலில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையில்லை. ஓப்பனிங் காட்டுவதற்கும், பால், கூழ் ஊத்துறதுக்கும், சில நல்ல வி‌ஷயங்களை பண்ணுவதற்கும் ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதை இனி பண்ணமுடியாது.



    இது டிஜிட்டல் உலகம். ரசிகர் மன்றங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும். எனக்கு 34 வயது ஆகிவிட்டது. இன்னும் ஆறேழு வருடங்கள் சினிமாவில் நல்லவிதமாக இருந்துவிட்டு ஓய்வு ஆனாலும் ஆகிவிடுவேன். இப்பவே என்னைக் கலாய்க்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு நான் ஹீரோயின்கூட ஆடிக்கிட்டு இருந்தா இன்னும் மோசமா கலாய்ப்பார்கள்’ என்று கூறி இருக்கிறார்.
    ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் தயாராகி வரும் கொரில்லா படம் ஹேங் ஓவர் 2 போஸ்டரை பார்த்து உருவானது என்று இயக்குனர் டான் சாண்டி கூறியிருக்கிறார். #Gorila #Jiiva
    ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.

    படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ இது ஒரு Heist காமெடி ஜேனர் படம். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிது. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதை படத்தின் கதை.

    இந்த கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் - 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவரும் ஒப்புக்கொண்டார்.

    மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல்’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம். மற்றப்படி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இந்த கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவா விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம்.



    ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி அளவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி பாண்டே. சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இவர் கதையின் திருப்புமுனையான கேரக்டர் என்பதால் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.

    படத்தில் மூத்த நடிகர் ராதாரவி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கடும் கோடை என்றும் பாராமல் படப்பிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. இந்த படம் ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் பிடிக்கும் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.’ என்றார்.
    ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `ஜிப்ஸி’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நடாஷா சிங் தமிழக ரசிகர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். #Gypsy #NatashaSingh
    ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் `ஜிப்ஸி’. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில்துவங்கியது. இதில் ஜீவா, நாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

    முதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. ‘‘மிஸ்.இமாச்சல் பிரதேசம் ஆன நடாஷா சிங் படித்தது பொறியியல். நடாஷா மாடலிங் குக்காக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. 



    நாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் என்னிடம் அதற்குள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். செம ஆச்சர்யமாக இருக்கு!’’ என்று படபடக்கிறார் நடாஷா. #Gypsy #Jiiva #NatashaSingh
    நடனம் என்றால் வெட்கத்தை தூக்கி எறிந்து விடுவேன் என்று ஜீவாவுடன் ‘முகமுடி’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே கூறியிருக்கிறார். #PoojaHegde
    தமிழில் முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இந்தியில் ஹவுஸ்புல் 4ம் பாகம், தமிழ், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார். திரையுலகுக்கு வந்து 6 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை 10 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

    வெட்கப்படும் சுபாவம் கொண்ட பூஜா மற்றவர்களிடம் பேச தயக்கம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் கவர்ச்சி படங்கள் வெளியிடும்போது அந்த வெட்கத்தை வெளிக்காட்டாமல் சூடான படங்களை வெளியிட்டு வருகிறார். இன்னொரு வி‌ஷயத்துக்கும் அவர் வெட்கத்தை ஒதுக்கி வைத்து விடுகிறார்.



    அது என்ன என்றபோது பதில் அளித்தார். ‘நடனம் ஒரு பெரிய கலை. அது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மிகவும் வெட்கப்படும் குணம் கொண்டவள். நடனம் என்று வந்துவிட்டால் வெட்கத்தை தூக்கி எறிந்துவிடுவேன். எவ்வளவு கடினமான அசைவு கொண்ட நடனமாக இருந்தாலும் ஆடுவேன். படங்களில் நடனம் ஆடும் வாய்ப்பு இப்போது நிறைய அமைகிறது. இனிவரும் படங்களில் எனது நடன காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்’ என்றார் பூஜா ஹெக்டே.
    ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், ராஜு முருகன் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று துவங்கியிருக்கிறது. #Gypsy #Jiiva
    ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. 

    ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதில் ஜீவா ஜோடியாக இமாச்சலப் பிரதேச மாடல் நடாசா சிங் நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். 

    குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டனர்.



    சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

    இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார். #Gypsy #Jiiva #NatasaSingh
    ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #GypsyFirstLook #Gypsy
    'குக்கூ' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இப்படத்தை அடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

    இதில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார். வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை 12.01 வெளியிட இருக்கிறார்கள். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



    ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ படத்தின் போஸ்டர் அனைவரையும் கவர்ந்ததால், இப்படத்தின் போஸ்டர் மீது அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். #GypsyFirstLook #Gypsy
    டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்து வந்த ‘கொரில்லா’ படத்தின் தன்னுடைய காட்சிகளை அனைத்தையும் முடித்து விட்டு பிரிந்திருக்கிறார். #Gorilla #Jiiva
    ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியது. பின்னர் தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ஜீவா தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் முடித்திருக்கிறார்.

    இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 



    விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாக இருக்கிறது. தாய்லாந்தில் `காங்' சிம்பன்சி குரங்குடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    'ஜிப்ஸி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை நீண்ட நாட்களாக தேடிவந்த ராஜுமுருகன் தற்போது கண்டுபிடித்து ஒப்பந்தம் செய்துள்ளார். #Jiiva
    'குக்கூ' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இப்படத்தை அடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

    இதில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகி தேடும் படலம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிப்பது உறுதியாகியுள்ளது.

    நடாஷா சிங் மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் தனி இடத்தைப் பெற்ற இவர் ‘ஜிப்ஸி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.



    ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் 'ஜிப்ஸி' படத்தைத் தயாரிக்கிறார். இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் விஜய் - ஜீவா இருவரும் நண்பன் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், அடுத்த படத்தில் விஜய்யுடன் இணைவதை நடிகர் ஜீவா உறுதி செய்திருக்கிறார். #Vijay63 #Jiiva
    நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. 

    இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

    தமிழ் சினிமாவில் அதிகமாக புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட். இந்த நிறுவனத்தின் அதிபர் சவுத்ரியின் மகன்கள் தான் நடிகர்கள் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு பூஜை போட இருக்கிறது.



    மூன்றில் ஒன்று விஜய் நடிக்கும் படம். நிறுவனத்தின் நூறாவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் ஜீவா, அதில் தானும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறி இருக்கிறார். ஜீவா ஏற்கனவே விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூப்பர் குட் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படத்திலும் ஆடி இருந்தார். #Vijay63 #Jiiva

    ×