search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry robbery"

    • இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு சாவியை வராண்டாவில் உள்ள வாசிங்மெஷினில் வைத்து விட்டு சென்றார். மதியம் அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாய் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவிதா அங்கு ஓடோடி வந்து பீரோவுக்குள் பார்த்தபோது, அதிலிருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, அங்கு வந்த கைரேகை நிபுணர்களும், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.
    • குத்தகை தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (80). இவர்கள் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று மாலை அருகில் வசிக்கும் அவர்களது மகன் ஒருவர் சகாதேவனை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை தேடிவந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைகை்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாயமான ஜானகியை உறவினர்கள் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு சென்றதால் அவர் கொலையுண்டது உடனடியாக தெரியவில்லை.

    மொத்தம் சுமார் 20 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை.

    தம்பதி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருன்றனர்.

    மேலும் முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்தூரில் வாலிபரை தாக்கி முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் 17-வது வார்டு வக்கீல் கிட்ட முஸ்தபா தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் நியாஸ் ( வயது 48). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவரது மகன் சையது அஸ்லாம் (18). இவர், நேற்றிரவு தனது நண்பரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார். இருவரும் டீ குடிக்க வெளியே சென்றனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது, முகமூடி அணிந்த 3 பேர் வீட்டில் இருந்து வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அவர்களை சையது அஸ்லாம் பிடிக்க முயற்சித்தார். அப்போது அந்த மர்மநபர்கள், திடீரென அஸ்லாமை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து அஸ்லாம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 2 அறைகளில் இருந்த 2 பீரோவையும் உடைத்திருந்த மர்மநபர்கள், அதிலிருந்த ரூ.4.50 லட்சம், 20 பவுன் நகைகள், 1 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூரில் வாலிபரை தாக்கி முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுலோச்சனா தான் அணிந்து இருந்த 11 சவரன் செயினை கழற்றி மணிபர்சில் வைத்தார்.
    • திடீரென மர்மநபர்கள் சுலோச்சனாவிடம் இருந்த பர்சை பறித்து சென்று விட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி சுலோச்சனா. இவர் தாம்பரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டு பஸ் மூலம் மணவாளநகர் வந்து இறங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்மநபர்களில் ஒருவன் சுலோச்சனாவிடம் பேச்சுக் கொடுத்தார். செல்லும் போது செயினை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதையடுத்து சுலோச்சனா தான் அணிந்து இருந்த 11 சவரன் செயினை கழற்றி மணிபர்சில் வைத்தார். அப்போது திடீரென மர்மநபர்கள் சுலோச்சனாவிடம் இருந்த பர்சை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • திருநின்றவூர், மாதவ வேணுகோபால் தெருவில் தனியாக வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி.
    • நேற்று இரவு அகிலாண்டேஸ்வரி வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அகிலாண்டேஸ்வரியை கத்திமுனையில் மிரட்டினர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 3 வாலிபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் சந்திரலேகாவை கத்தி முனையில் மிரட்டி நகை-பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    திருநின்றவூர், மாதவ வேணுகோபால் தெருவில் தனியாக வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி(65). நேற்று இரவு அவர் வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அகிலாண்டேஸ்வரியை கத்திமுனையில் மிரட்டினர்.

    வீட்டில் நகை-பணம் இல்லாததால் அகிலாண்டேஸ்வரி அணிந்து இருந்த கம்மல், மூக்குத்தி, வளையலை பறித்து கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    • முத்துச்சாமிக்கு நடக்க முடியாததால் வீட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்திருப்பார்.

    திருப்பூர்:

    திருப்பூா் எஸ்.வி. காலனி பிரதான சாலை டி.எஸ்.ஆா். லே-அவுட் பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (வயது 72), ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியா். இவரது மனைவி சந்திராமணி (67). இந்த தம்பதியின் மகன் பூவேந்தனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் கே.பி.என்.காலனியில் வசித்து வருகிறார்.

    முத்துசாமியும், சந்திராமணியும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சந்திராமணி வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை ஆணையா் வனிதா, உதவி ஆணையா் அனில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

    அப்போது சந்திராமணியின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு 5 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யாரென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    முத்துசாமியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. ஆகவே, முத்துசாமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அந்தநபர்தான் சந்திராமணியை கொலை செய்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம்(60) என்பதும், முத்துச்சாமியின் நண்பர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாழப்பாடி சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூருக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்திராமணியை ஆறுமுகம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    சேலம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முத்துச்சாமிக்கு நடக்க முடியாததால் வீட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்திருப்பார். அப்போது அந்த வழியாக ஆறுமுகம் போகும் போது 2பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 2பேரும் நண்பர்களாகினர்.

    முத்துச்சாமி நடக்க முடியாது என்பதால் அவரது வீட்டிற்கு தேவையான உதவிகளை ஆறுமுகம் செய்து கொடுத்துள்ளார். இதனால் அவர் மீதான நம்பிக்கையில் முத்துச்சாமி தனது வீட்டிலேயே ஆறுமுகத்தை தங்க வைத்துள்ளார். உணவும் வழங்கியுள்ளார். சம்பவத்தன்று இரவும் ஆறுமுகம் முத்துச்சாமி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

    அதிகாலை சந்திராமணி எழுந்து சமையல் செய்த போது அவர் அணிந்திருந்த நகையை ஆறுமுகம் பறிக்க திட்டமிட்டார். இதையடுத்து சந்திராமணி அணிந்திருந்த நகையை பறித்ததுடன், அவரை உயிருடன் விட்டால் தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்பதால் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார். சொந்த ஊர் சேலம் என்பதால் அவர் அங்கு சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். 

    • தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார்.
    • சுரேஷ்குமாரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகையன் (60). விவசாயி. இவரது மனைவி சரோஜா (55).

    இவர்களுக்கு சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

    சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் முருகையனும், அவரது மனைவியும் தோட்டம் அருகே உள்ள வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.

    சுரேஷ்குமார், தோட்டத்திற்கு வந்து விட்டு, பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். நேற்று வேலை காரணமாக சுரேஷ்குமார் தோட்டத்திற்கு வரவில்லை. அவரது தந்தை முருகையன் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். வீட்டில் சரோஜா மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் காலையில் வராததால் மாலையில் தனது அம்மாவை பார்க்க சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு அவரது தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தது.

    தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் இறந்து கிடந்த சரோஜாவின் உடலை பார்த்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வ விநாயகம், முருகதாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டு ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் எப்போது எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

    மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று மர்மநபர் 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதற்கிடையே கொலை நடந்த வீட்டில் வாசல் மற்றும் அங்குள்ள தெருவில் ரத்தக்கறையாக உள்ளது. கொள்ளையன் மூதாட்டியை கொன்று நகையை எடுத்து கொண்ட பின் ரத்தக்கறையுடன் அங்கு சுற்றி திரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சரோஜாவின் கணவர், மகன் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியோ ராஜேஷ். அவரது மனைவி சித்ரகுமாரி (வயது48).

    இவர் பாதிராப்புளியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

    நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர்.

    பின்னர் வீட்டின் பின்பக்கமாக உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் சித்ரகுமாரி அணிந்திருந்த 15 பவுன் நகை, அவரது மகள் கிருத்திகா(22) அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். உடேன அந்த கும்பல் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியது. அதனை தொடர்ந்து அந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு சித்ரகுமாரி தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வர வைக்கப்பட்டது. அது பல இடங்களில் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை . மேலும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், சிராஜுதீன் மற்றும் போலீசார் கைரேகை சேகரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்தை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ .எஸ். பி. அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டப்பகலில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர்களிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வாஹதிவாரி கன்றிக பகுதியை சேர்ந்தவர்கள் பத்மா (வயது 40), சரஸ்வதி (45). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருந்தனர்.

    அப்போது ஹெல்மெட் அணிந்த 3 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். பைக் ஓட்டி வந்த வாலிபர் மட்டும் அங்கேயே நின்று கொண்டார். மற்ற 2 வாலிபர்கள் பள்ளிக்குள் வேகமாக வந்தனர்.

    அவர்கள் ஆசிரியை பத்மா பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்குள் நுழைந்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி யாராவது சத்தமிட்டால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

    பின்னர் பத்மா அணிந்திருந்த நகைகளை தருமாறு கேட்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டனர்.

    இதையடுத்து அருகில் இருந்த வகுப்பறைக்குள் சென்று அங்கு ஆசிரியை சரஸ்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ஓஜிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து நகை பறிகொடுத்த ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர்களிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
    • நகை கொள்ளை குறித்து கரிமேடு போலீசில் மாரீஸ்வரி புகார் கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுகுணா (வயது 46). இவர் மதுரை மாநகர வரதட்சணை தடுப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சுகுணா நேற்று இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். சுகுணா கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்புக்கு வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் சுகுணா புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை கரிமேடு வேல்முருகன் நகர் வைகை தெருவை சேர்ந்தவர் கண்ணன் ஆசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி (45). இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் மதுரா கோட்ஸ் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக கரிமேடு போலீசில் மாரீஸ்வரி புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகள் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
    • சாந்தியை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விவசாயி. கடந்த செப்டம்பர் மாதம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது. அப்போது உறவுக்காரர் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவர் மணமகளின் 15 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.

    இதே போல போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் திருமணம் மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மேலும் இதேபோல் 11 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் தனிப்படை போலீசார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் வைத்து விசாரித்தனர். இதில் கடந்த வாரம் சென்னை தி.நகரில் பிரபல துணிக்கடையில் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற தில் சாந்தி திருமண மண்டபங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகள் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    சாந்தியை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • நகைகளை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சத்தியசுந்திரத்தை அனுப்பி வைத்தனர்.
    • போலீசில் சொல்ல பயமாக இருந்ததால், தற்போது குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் சத்தியசுந்தரம் (வயது 40). இவர் வெப்படையில் மங்கை சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இரவு 9 மணியளவில் கடையை பூட்டி விட்டு, மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மேட்டுக்கடை பிரிவு பகுதியில் மொபட்டை வழிமறித்து 5 பேர், சத்தியசுந்தரத்தை காரில் கடத்திச் சென்றனர். பின்னர் மனைவிக்கு போன் செய்து, நகைகளை கொடுத்து அனுப்ப சொல், என கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினர். இதையடுத்து அவரது மனைவி 18 பவுன் நகைகளை கொடுத்து அனுப்பினார்.

    நகைகளை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சத்தியசுந்திரத்தை அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்போது போலீசில் சொல்ல பயமாக இருந்ததால், தற்போது குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    இதன்படி போலீசார் விசாரணை நடத்தி கரூர், வேலூரை சேர்ந்த பெல்ட் குமார் (37), ராஜன் (39), சலீம் (25) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் தீபன் (32) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பூமிநாதன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×