search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் கொள்ளை"

    • கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
    • கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி வி.கே.வி.நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (70).

    இவர் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மீனாட்சி சுந்தரம் மாதந்தோறும் பவுர்ணமியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை அம்மன் கோவிலுக்கு மனைவியுடன் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று பவுர்ணமியையொட்டி மாலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று காலை இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி சுந்தரம் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர். இதுகுறித்து உடனடியாக மீனாட்சி சுந்தரம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    • கொள்ளையன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை வைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அதிகாலை நேரத்தில் ஆயுதங்களுடன் வீட்டில் கொள்ளையன் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் உள்ள கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவரது மனைவி மேனகா (40).

    இவர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில், வீட்டில் நன்கு தூங்கிக் கொண்டிருந்த சிவகுமார், ஏதோ சத்தம் கேட்டு திடீரென விழித்துப் பார்த்தார்.

    அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிவகுமாரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பீரோவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

    வீட்டின் உரிமையாளர் விழித்து கொண்டதை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையன், தான் கொண்டு வந்திருந்த கத்தி, கடப்பாறை மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் கொள்ளையடித்த பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து சிவக்குமார் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கொங்கணாபுரம் போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.

    மேலும், வீட்டில் எவ்வளவு பணம் கொள்ளை போயுள்ளது என்பது குறித்தும், கொள்ளையன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை வைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் ஆயுதங்களுடன் வீட்டில் கொள்ளையன் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    • இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு சாவியை வராண்டாவில் உள்ள வாசிங்மெஷினில் வைத்து விட்டு சென்றார். மதியம் அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாய் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவிதா அங்கு ஓடோடி வந்து பீரோவுக்குள் பார்த்தபோது, அதிலிருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, அங்கு வந்த கைரேகை நிபுணர்களும், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கு சாமி படத்தின் பின்புறம் வைத்துள்ள ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
    • மேலும் அங்குள்ள சிறிய நகையை ஒன்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பீரோவை திறக்க முயற்சி செய்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கள்ளுகடை, காவான் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 48) இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலை அருகில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய் கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக, மாணவர்களை வெளிநாட்டு கல்விக்கு அனுப்பும் பணி செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு ஜெய் கணேஷ் குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு உணவு முடிந்து தூங்க சென்றனர். கீழ்த்தளத்தில் உள்ள பிரதான கதவை பூட்டிவிட்டு ஜெய்கணேஷ் முதல் மாடியின் வெளிப்புறத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உட்புறத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு சாமி படத்தின் பின்புறம் வைத்துள்ள ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் அங்குள்ள சிறிய நகையை ஒன்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பீரோவை திறக்க முயற்சி செய்தனர்.

    அப்போது சத்தம் கேட்டு விழித்தெழுந்த விஜயலட்சுமி அங்கு முகமூடி அணிந்து மர்மநபர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். இதனை அடுத்து அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கொள்ளையர்கள் ஜெய்கணேஷ் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லகுட்டூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயி வீட்டினுள் நுழைய முயன்றனர்.

    அங்கு இருந்தவர்கள், பருத்தியை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில் கொள்ளையர்களை கண்ட அவர்கள் சத்தம் போட்டு விரட்டி பிடிக்க முயற்சி செய்து உள்ளனர். இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இதுபற்றி பூலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் காவல் துறை உயர் அலுவலர்கள் முகாமிட்டு கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பூலாம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பாறைக்காடு பகுதியில் உள்ள லாரி டிரைவர் வீட்டிலும், பில்லக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டிய நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் முகமூடி கொள்ளை சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×