என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் கந்தம்பட்டியில் இ.எஸ்.ஐ. ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
- இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு சாவியை வராண்டாவில் உள்ள வாசிங்மெஷினில் வைத்து விட்டு சென்றார். மதியம் அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாய் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவிதா அங்கு ஓடோடி வந்து பீரோவுக்குள் பார்த்தபோது, அதிலிருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, அங்கு வந்த கைரேகை நிபுணர்களும், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்