என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண மண்டபங்களில் உறவுக்காரர்போல் நடித்து நகை திருடிய பெண் கைது
    X

    திருமண மண்டபங்களில் உறவுக்காரர்போல் நடித்து நகை திருடிய பெண் கைது

    • திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகள் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
    • சாந்தியை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விவசாயி. கடந்த செப்டம்பர் மாதம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது. அப்போது உறவுக்காரர் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவர் மணமகளின் 15 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.

    இதே போல போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் திருமணம் மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மேலும் இதேபோல் 11 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் தனிப்படை போலீசார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் வைத்து விசாரித்தனர். இதில் கடந்த வாரம் சென்னை தி.நகரில் பிரபல துணிக்கடையில் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற தில் சாந்தி திருமண மண்டபங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகள் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    சாந்தியை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×