என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாபிராம்-திருநின்றவூரில் 2 வீடுகளில் பெண்களை கத்தி முனையில் மிரட்டி நகை கொள்ளை
- திருநின்றவூர், மாதவ வேணுகோபால் தெருவில் தனியாக வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி.
- நேற்று இரவு அகிலாண்டேஸ்வரி வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அகிலாண்டேஸ்வரியை கத்திமுனையில் மிரட்டினர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 3 வாலிபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் சந்திரலேகாவை கத்தி முனையில் மிரட்டி நகை-பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
திருநின்றவூர், மாதவ வேணுகோபால் தெருவில் தனியாக வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி(65). நேற்று இரவு அவர் வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அகிலாண்டேஸ்வரியை கத்திமுனையில் மிரட்டினர்.
வீட்டில் நகை-பணம் இல்லாததால் அகிலாண்டேஸ்வரி அணிந்து இருந்த கம்மல், மூக்குத்தி, வளையலை பறித்து கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






