என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமுகை அருகே பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று 15 பவுன் நகை கொள்ளை
- தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார்.
- சுரேஷ்குமாரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகையன் (60). விவசாயி. இவரது மனைவி சரோஜா (55).
இவர்களுக்கு சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் முருகையனும், அவரது மனைவியும் தோட்டம் அருகே உள்ள வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.
சுரேஷ்குமார், தோட்டத்திற்கு வந்து விட்டு, பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். நேற்று வேலை காரணமாக சுரேஷ்குமார் தோட்டத்திற்கு வரவில்லை. அவரது தந்தை முருகையன் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். வீட்டில் சரோஜா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் காலையில் வராததால் மாலையில் தனது அம்மாவை பார்க்க சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
இதனால் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு அவரது தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தது.
தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் இறந்து கிடந்த சரோஜாவின் உடலை பார்த்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வ விநாயகம், முருகதாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டு ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் எப்போது எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.
மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று மர்மநபர் 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே கொலை நடந்த வீட்டில் வாசல் மற்றும் அங்குள்ள தெருவில் ரத்தக்கறையாக உள்ளது. கொள்ளையன் மூதாட்டியை கொன்று நகையை எடுத்து கொண்ட பின் ரத்தக்கறையுடன் அங்கு சுற்றி திரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சரோஜாவின் கணவர், மகன் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்