என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewellery money robbery"
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியகோமேஸ்வரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை நடந்து வருகிறது. விஷேச நாட்களில் பக்தர்கள் துலாபாரம் அளித்தும். உண்டியில் காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
நேற்று பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் மர்மகும்பல் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் சாமி நகைகள், பக்தர்கள் துலாபாரம் வழங்கிய ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகைகள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:
மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சிவசுந்தரி (வயது 63). இவர் தனது மகளுடன் பெத்தானியாபுரம் சென்று 5 பவுன் நகை வாங்கினார்.
பின்னர் நகை மற்றும் ரூ. 7 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு ஷேர் ஆட்டோவில் ஏறினார். கூட்ட நெரிசலை பயன் படுத்தி அந்த பணப்பையை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
இதுகுறித்து கரிமேடு போலீசில் சிவசுந்தரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் கூடல்புதூர் கலை நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனது மகள் நித்யா (27)வுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். யானைக்கல் பாலத்தில் சென்றபோது அங்கு நின்ற ஒரு வாலிபர் நித்யா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து விளக்குத் தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூட்டிய வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் நகர் பாரதி நகர், நேருநகர், சேதுநகர் மற்றும் ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. திருடர்களின் கைவரிசை தொடர்வதால் பொதுமக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய விழித்திருக்கும் நிலை காணப்படுகிறது.
ராமநாதபுரம் ராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 42). இவர் சைல்டுலைன் அமைப்பில் அணி உறுப்பினராக உள்ளார்.
இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.கடந்த 7-ந் தேதி ராஜேஸ்வரியின் மகள் ஜனனிக்கு திருமண நாள். எனவே வீட்டை பூட்டி விட்டு பாரதிநகரில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். வெளியில் உள்ள பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவை உடைத்து இருப்பது தெரியவந்தது.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராமேஸ்வரி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து வரும் திருட்டு சம்பவத்தால் ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாறுவேடத்தில் தனிப்பிரிவு போலீசார் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் திருடர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து திருட்டில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சென்னை:
சென்னையை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் ஆந்திராவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஆந்திராவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை திரும்பினார்கள். ரெயில் நேற்று இரவு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தது.
அப்போது விஜயலட்சுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை கணவர் ராமநாதன் எழுப்பினார். அப்போது விஜயலட்சுமி அணிந்திருந்த 32 பவுன் நகை மாயமாகி இருந்தது. அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக விஜயலட்சுமி எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ஆந்திரா என்பதால் இந்த வழக்கு ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அருகே உள்ள பல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம் (47) விவசாயி இவரது மனைவி அம்சா, 2 மகள் ஓரு மகன் உள்ளனர். நேற்று காலை இவர்கள் வீட்டை பூட்டி விட்டு விவசாய நிலத்துக்கு சென்றிருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
விவசாய நிலத்தில் இருந்து திரும்பிய துலுக்கானம் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது கண்டு திடுக்கிட்டார். இது தொடர்பாக தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாரதி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தெற்கு மாசி வீதி கான்சாமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). இவர் தனது வீட்டின் பின்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 24-ந்தேதி வங்கியில் அடகு வைத்த நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அதனை ஒரு பையில் வைத்து வீட்டில் உள்ள ஆணியில் தொங்க விட்டிருந்தார்.
இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் இருந்த பை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து தெற்குவாசல் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்