search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 14 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 14 பவுன் நகை-பணம் கொள்ளை

    மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை தெற்கு மாசி வீதி கான்சாமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). இவர் தனது வீட்டின் பின்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி வங்கியில் அடகு வைத்த நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அதனை ஒரு பையில் வைத்து வீட்டில் உள்ள ஆணியில் தொங்க விட்டிருந்தார்.

    இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் இருந்த பை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து தெற்குவாசல் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×