search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt officer"

    • பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • வீட்டிற்கு வா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கலாம் என அதிகாரி கேட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துகுரு வட்டார வளர்ச்சி அலுவலர் பதான் கான். (வயது 50). 30 வயது இளம்பெண் ஒருவர் பதான்கானின் உதவியாளராக அதே அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

    பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கலாம் என கேட்டுள்ளார்.

    அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது செல்போனுக்கு மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

    பதான்கானின் தொல்லை எல்லை மீறியதால் விரக்தி அடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.

    இதனைக் கண்ட அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இளம்பெண்ணிடம் எதற்காக தற்கொலை முயற்சி செய்தாய் என கேட்டபோது பதான்கானின் லீலைகள் குறித்து தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பதான்கானிடம் உதவியாளரை ஏன் நிர்வாணமாக குளிக்க அழைத்தாய் எனக் கேட்டபோது அவர் விளையாட்டாக கேட்டேன் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பதான்கானை சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது பதான்கான் தெரியாமல் தவறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

    இது குறித்து இளம் பெண்ணின் கணவர் இந்துகோர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூரில் அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவரது மனைவி ஷோபனா. பன்னீர் செல்வம் சேலத்தில் பொது பணித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர் செல்வம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விழுப்புரத்தில் நடக்கும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

    தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துஇன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். 
    ×