என் மலர்
நீங்கள் தேடியது "govt officer"
- போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் ஸ்ரீபத்மாவதி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதற்காக கீரை கட்டு கொள்முதல் செய்ததில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரூ.25 ரூபாய் மதிக்கத்தக்க ஒரு கிலோ கீரை கட்டை 80 ரூபாய்க்கு வாங்கி ஸ்ரீ பத்மாவதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார்.
அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டை ரூ.80 வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி என்.ஓ.சி. கொடுத்த நிலையில், இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி மாற்றம் செய்து தனது பணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனைக்கு கேட்டபோது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர், ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
பத்மாவதி இன்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று அவரை 'சஸ்பெண்டு' செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- வீட்டிற்கு வா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கலாம் என அதிகாரி கேட்டுள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துகுரு வட்டார வளர்ச்சி அலுவலர் பதான் கான். (வயது 50). 30 வயது இளம்பெண் ஒருவர் பதான்கானின் உதவியாளராக அதே அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கலாம் என கேட்டுள்ளார்.
அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது செல்போனுக்கு மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார்.
பதான்கானின் தொல்லை எல்லை மீறியதால் விரக்தி அடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.
இதனைக் கண்ட அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இளம்பெண்ணிடம் எதற்காக தற்கொலை முயற்சி செய்தாய் என கேட்டபோது பதான்கானின் லீலைகள் குறித்து தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பதான்கானிடம் உதவியாளரை ஏன் நிர்வாணமாக குளிக்க அழைத்தாய் எனக் கேட்டபோது அவர் விளையாட்டாக கேட்டேன் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பதான்கானை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது பதான்கான் தெரியாமல் தவறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இது குறித்து இளம் பெண்ணின் கணவர் இந்துகோர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






