என் மலர்
நீங்கள் தேடியது "Tenkasi Govt Hospital"
- போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் ஸ்ரீபத்மாவதி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதற்காக கீரை கட்டு கொள்முதல் செய்ததில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரூ.25 ரூபாய் மதிக்கத்தக்க ஒரு கிலோ கீரை கட்டை 80 ரூபாய்க்கு வாங்கி ஸ்ரீ பத்மாவதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார்.
அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டை ரூ.80 வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி என்.ஓ.சி. கொடுத்த நிலையில், இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி மாற்றம் செய்து தனது பணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனைக்கு கேட்டபோது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர், ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
பத்மாவதி இன்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று அவரை 'சஸ்பெண்டு' செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் பிறந்த பொழுதிலும், தாயையும் காப்பாற்ற முடியாமல் அவரும் இறந்தது தட்டாங்குளம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- சங்கீதாவுக்கு சரியான சிகிச்சை அளித்து உரிய நேரத்தில் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் தாய்-குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூ இசக்கி.
இவரது மகள் சங்கீதா (வயது 21). இவருக்கும் சுரண்டையை சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே பிரசவத்திற்காக சுந்தரபாண்டியபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். திடீரென சங்கீதாவுக்கு ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேல் சிகிச்சைக்காக உடனடியாக தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சையால் சங்கீதாவுக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதா கடுமையான ரத்தப் போக்கால் சோர்வு அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை சங்கீதாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் பிறந்த பொழுதிலும், தாயையும் காப்பாற்ற முடியாமல் அவரும் இறந்தது தட்டாங்குளம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சங்கீதாவிற்கு சுந்தராபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான சிகிச்சை அளித்து உரிய நேரத்தில் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் தாய்-குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.






