search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai woman"

    • திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும்.
    • 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி (வயது45). இவர் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடை பெறும் திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அவர் கலந்து கொள்ளஉள்ளார்.

    ஏசியா பசிபிக் என்ற பட்டத்தை வென்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருமதி உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் இளநிலை பட்டமாக லைப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் அண்ட் எச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ. ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட படிப்புகள் படித்து உள்ளார்.

    இதுதொடர்பாக பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இதில் 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று விதமாக நடைபெறும். உடற் தகுதிச் சுற்று, உடல் பராமரிப்பு, தன்னம்பிக்கை, மனதிடம் ஆகிய சுற்றுகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு 25 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக தனிநபர் நேர்காணல் சுற்று நடக்கும். இதில் 5 நடுவர்கள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்குள் நாம் பதில் சொல்ல வேண்டும்.

    இதற்கு 50 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று ஆகும்.

    மேற்படி சுற்றுக்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் 16 பேரும் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தச் சமூக பிரச்சினைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் 30 நொடிகள் பேச வேண்டும்.

    பிறகு அவர்கள் அதில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் நாம் பதில் சொல்ல வேண்டும். நான் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை ஆகிய சமூக பிரச்சினைகளை தேர்ந்தெடுத்து பேச உள்ளேன். இந்த சுற்றின் இறுதியில் 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சவாரி சென்றபோது 2 படகுகள் மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறி நீரில் மூழ்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 9 பேர் உயிர்தப்பினர்.
    செங்குன்றம்:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி தினந்தோறும் படகு சவாரி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பழவேற்காட்டில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மேரி, மைக்கேல், சகாயமேரி, பெரியநாயகி உள்பட 10 பேர் பழவேற்காட்டுக்கு வந்தனர்.

    பின்னர் பழவேற்காடு ஏரியும் - கடலும் கலக்கும் இடமான முகத்துவார பகுதிக்கு படகில் சென்றனர். ஏரியின் நடுவே சென்றபோது சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த மற்றொரு படகு, இந்த படகு மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி சென்னை சுற்றுலா பயணிகள் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். உடனே ஏரியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் விரைந்து வந்து 10 பேரையும் மீட்டு பழவேற்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி (வயது 40) என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மற்ற 9 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார், மேரியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடையை மீறி படகு சவாரி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சபரிமலைக்கு சென்று திரும்பிய சென்னை பெண்களுக்கு எதிராக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sabarimala

    கம்பம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கேரள அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. ஆனால் கோவிலுக்குள் பெண்களை நுழைய விடாமல் இந்து அமைப்பினரும் ஐயப்ப பக்தர்களும் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சென்னையைச் சேர்ந்த மனிதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 11 இளம்பெண்கள் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் சபரிமலை நோக்கி வந்தனர். பம்பையில் அவர்களை தடுத்து நிறுத்திய ஐயப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் கோ‌ஷம் எழுப்பினர். இதனையடுத்து அவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அவர்கள் வந்த வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. திரும்பி வரும் வழியில் கேரளாவில் கட்டப்பனையில் அந்த வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவிலுக்கு வந்த பெண்களை பத்திரமாக திருப்பி அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டது. கேரள-தமிழக எல்லையில் அவர்கள் வாகனம் கம்பம் மெட்டு வந்தடைந்தவுடன் தேனி மாவட்ட போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து வந்தனர்.

    ஆமையாறு, கம்பம், சின்னமனூர், சீலையம்பட்டி, தேனி வழியாக ஆண்டிப்பட்டி என பல்வேறு இடங்களில் அவர்கள் வந்த வாகனம் மெயின் ரோட்டில் வராமல் குறுக்கு பாதையில் போலீசார் உதவியுடன் அழைத்து வரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பல இடங்களில் அவர்கள் வாகனத்தை மறிக்க திரண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு வந்து மாற்றுப்பாதையில் பெண்களை அழைத்துச் சென்றனர்.

    இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து மதுரை விமான நிலையம் வரை கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் 11 பெண்களும் சென்னை சென்றனர். #Sabarimala

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்த சென்னை பெண்ணிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சென்னை:

    சென்னையை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் ஆந்திராவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஆந்திராவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை திரும்பினார்கள். ரெயில் நேற்று இரவு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தது.

    அப்போது விஜயலட்சுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை கணவர் ராமநாதன் எழுப்பினார். அப்போது விஜயலட்சுமி அணிந்திருந்த 32 பவுன் நகை மாயமாகி இருந்தது. அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக விஜயலட்சுமி எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ஆந்திரா என்பதால் இந்த வழக்கு ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ×