search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jailed"

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19)  இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.    இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

    மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

    • போலீசார் 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

     டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜெகதீஸ் (28) டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதே போன்று டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்த சதீஸ் (46). டி.என்.பாளையத்தில் வைத்துள்ள போட்டோ ஸ்டுடியோ கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கேமரா, கம்ப்யூட்டர் மானி ட்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்திய போது அவர்கள் தப்பியோட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும்,  அவர்கள் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை மாவட்டம் சிறுமுகை வடபகதூரை சேர்ந்த நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பாசரை புதுக்காலனியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோபி நீதிமன்றத்திலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
    • ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

    • கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ரூ.74 லட்சம் மதிப்புள்ள சொத்தை திருப்பூரில் பத்திரப்பதிவு செய்தபோது, சொத்தில் உள்ள கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உள்பட 27 மாவட்டங்களுக்கான மதிப்பீடு அலுவலகம் அங்கு அமைந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமமூர்த்தி, திருப்பூரில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கள ஆய்வு செய்து, அதற்கான மதிப்பீடு அறிக்கையை அளிக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கோபாலகிருஷ்ணனிடம் ரூ.75 ஆயிரம் கேட்டுள்ளார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி, ரூ.75 ஆயிரம் லஞ்ச பணத்தை கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினர். உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி கூறியதின் பேரில், அவரது உதவியாளராக தனிநபர் குமார் (45) என்பவர் திருப்பூரை அடுத்த மங்கலத்துக்கு வந்திருந்தார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் ரூ.75 ஆயிரத்தை கொடுத்தபோது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதுரையில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமமூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. இதனையடுத்து அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரிந்தது.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்ட 'க்யூ பிரிவு' போலீசார், திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் சட்டவிரே ாதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி கண்காணித்து வந்தனர்.

    கடந்த 2020ம் ஆண்டு காங்கயம், காடையூரில் தங்கியிருந்த இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த தசிக்குமார், 36 என்வரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரி ந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளி தசிக்குமாருக்கு மூன்று ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.இதனையடுத்து அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 3-ந் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

    அவிநாசி :

    சேவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் கிருஷ்ணபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் கடந்த 3-ந் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சேவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சேவூர் மங்கரசுவலையாபாளையம் தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சேவூர் அருகே புதுச்சந்தையை சேர்ந்த புக்கான்மூர்த்தி (வயது 45), வையாபுரிகவுண்டன் புதூரைச் சேர்ந்த பீட்டர் ராஜேந்திரன் (40), மங்கரசுவலையாபாளையத்தைச் சேர்ந்த சண்டி என்கிற கருப்புசாமி (38) என்றும், இவர்கள் 3 பேரும் ராமசாமி வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • பெண்ணை தாக்கிய கணவருக்கு சிறை
    • பெண்ணை தாக்கிய கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புதுக்கோட்டை,

    ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை ஊராட்சி வடக்கு தோப்புப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (வயது 39). டிரைவர். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி பிரேமாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து பிரேமாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அருகில் கிடந்த கம்பியை எடுத்து மனைவி தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் நேற்று ராஜேந்திரனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தர உத்தரவு
    • சிறையில் அடைப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .திருமானூர்அடுத்த கரைவெட்டி பரதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சக்திவேல்(வயது 20). இவர் கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் காதலித்து வந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் 3 மாதம் கர்ப்பிணியான அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சக்திவேலுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சக்திவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
    • இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பனையம் பள்ளி- பவானிசாகர் ரோடு மல்லியம்பட்டி வனப்பகுதி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் அடுத்த அரே பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்து அவரிடம் இருந்து ரூ.1½ கோடி அபகரித்து கொண்டு விடுவித்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக மோகன், கர்ணன், பிரைட் பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    முக்கிய குற்றவாளியான அரியப்பம் பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மிலிட்டரி சரவணன் (47) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனின் உதவியாளராக இருந்தார்.

    இந்த நிலையில் மிலிட்டரி சரவணன் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து கடந்த அக்டோபர் மாதம் தனது வீடு அருகே விஷம் குடித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மீண்டும் தலைமறைவானார். இதையடுத்து முன்னாள் எம்எல்.ஏ. கடத்தல் வழக்கில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு முன் ஜாமீன் வழங்க மறுத்து ஈரோடு மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.

    இதை தொடர்ந்து சரவணன் கடந்த 17-ந் தேதி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து சரண் அடைய உத்தர விட்டார்.

    இதையடுத்து மிலிட்டரி சரவணன் ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து அவர் சத்தி யமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    • இந்த வழக்கில் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட 14 பேர் மீது வழக்கு.
    • வழக்கில் சிக்கி அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதற்கான பதிவேட்டில் திருத்தம் செய்து வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட சில தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது.

    இதுகுறித்து 2021-ம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேனி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கிருஷ்ணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து தேக்கம்பட்டி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    • போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடகா எல்லை யில் அமைந்துள்ளது புளி ஞ்சூர் சோதனைசாவடி. இங்கு போலீசார் மற்றும் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகன ங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் இங்கு சோத னைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கர்நாடக வில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு மது வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அநத வழியாக கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஈச்சர் வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெங்காய மூட்டை இருந்தது.

    மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வெங்காய மூட்டைகளை இறக்கி பார்த்த போது வெங்காய மூட்டை அடியில் கேன்களில் ஸ்பிரிட் இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஹரி மற்றும் வினோத் என்பதும், அவர்கள் மைசூரில் இருந்து கேரளாவுக்கு மதுவுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் வெங்காய மூட்டைக்கு அடியில் பதுக்கி கடத்தி சென்றதும் தெரியவந்து.

    இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×