search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு"

    • அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    ×