search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "information"

    • வருகிற 6-ந் தேதி நடக்கிற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
    • இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரு கின்ற 6-ந் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெறு கிறது. இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

    இதில் மாணவ, மாணவி கள் பயன்பெறும் வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கான வழிகாட்டி கையேடுகள், தொழில் முனைவோர் மற்றும் உயர் கல்விக்கான கடன் திட்ட உதவிகள் பெறுவது குறித்து வங்கியாளர்களின் ஆலோ சனை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறையின் ஆலோ சனை மற்றும் உயர்கல்வி ஆலோசனை வழங்கப்பட வுள்ளது.

    மேலும் இக்கருத்தரங் களில் மாணவ, மாணவிகளி டம் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்து அதற் கேற்ப உரிய விளக்கங்களை அளிப்பதற்கும் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதால் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக் கான விளக்கங்களை கேட் டறிந்து பயன்பெற வேண் டும் என அவர் கூறியுள்ளார்.

    • மாவட்ட சைக்கிள் போட்டி நடத்தப்படும்.
    • பட்டிணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் காலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

    ராமநாதபுரம்

    அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் ேபாட்டிகள் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. 13, 15,17, வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு தனி தனியே போட்டிகள் நடத்தப்படும்.

    ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் காலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 4 முதல் 10-வது இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல், வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகலுடன் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாத புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • புதிய வீட்டின் கிரகபிரவேசத்திற்கு முன்பு பலியான தந்தை-மகள்
    • சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    குன்னூர்,

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 64). இவர் தனது மனைவி, மகள் கவுசல்யா(29), மற்றும் 3 வயது பேத்தியுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இவர் சமீபத்தில் கீழக்கடையத்தில் ஆசை ஆசையாக, புதிய வீடு ஒன்றை கட்டிவந்தார். அந்த வீட்டின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அதற்கு கிரகபிரவேசம் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.

    இந்நிலையில், விடுமுறையையொட்டி தென்காசியில் கணவர் வீட்டில் இருந்த அவரது மகள் கவுசல்யா, சொந்த ஊருக்கு மகளுடன் வந்திருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டதால் இளங்கோ குடும்பத்தினரும் செல்ல விருப்பப்பட்டனர். இதனால் இளங்கோ, நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால் வற்புறுத்தலின்பேரில் அவர்கள் அனைவரும் சுற்றுலாக்கு புறப்பட்டு சென்ற இடத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி கவுசல்யாவும், அவரது தந்தை இளங்கோவும் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

    கடையம் ராமநதி ரோட்டை சேர்ந்த சண்முகையா தனது மனைவி பேபி கலாவுடன்(36) சென்றுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறான். இளைய மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான்.

    தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி இளைய மகன், அந்த பகுதியில் உள்ளவர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளான்.

    மேலும் பேபிகலாவும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றதில்லை. இதனால் அவர் தனது மூத்த மகனை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவர் மற்றும் இளைய மகனுடன் புறப்பட்டு சென்றுள்ளார். அவ்வாறு சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    • கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.
    • ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.

    உடுமலை

    தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மன்னர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் ஆண்ட பகுதி, வழங்கிய தானங்கள் உள்ளிட்ட பல சரித்திர ஆதாரங்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. அந்தவகையில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு இறுதி வரையிலும் கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.

    இதற்கு எடுத்துக்காட்டாக, கரைவழி பகுதியில் கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய பகுதிகளில் வீரசோழன், வீரசோழ கலமூர்க்கன், விக்கிரம சோழன், அபிமான சோழ ராஜாதிராஜன், உத்தம சோழ வீரநாராயணன், முதல் குலோத்துங்க சோழன், வீரராசேந்திர சோழன், இரண்டாம் விக்கிரம சோழன் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளமாக உள்ளது.

    மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதி மட்டும் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் கொண்டதாக உள்ளது. அத்துடன் அதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. மேலும் கி.பி. 960 முதல் 980 வரை அமரபுயங்கன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தான் சோமவாரப்பட்டி சிவனியத்தலம் கற்கோயில் உருவாக்கப்பட்டதால் அம்மன்னனுடைய பெயரில் அமரபுயங்கீசன் என்னும் பெயரில் அந்த கோவில் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. அது போல சிஞ்சுவாடி பகுதியில் ஒரு கல்வெட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ விக்கரம சோழன் தெவற்கு பங்குனி எனவும், ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.இதில் பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்து இருக்கின்றன.

    இருந்தாலும் அதில் உள்ள, தெரியும் கல்வெட்டு எழுத்துக்களை வைத்து பார்த்தால் வீரபாண்டியன், ஆட்சியாண்டை குறிப்பதாகவும், நில தானம் செய்ததற்கான கல்வெட்டெழுத்துக்கள் என்பது தெரிய வருகிறது.சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டெழுத்து என்பதால் இது பிற்கால பாண்டியர்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தென்கொங்குப் பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி என்றும், இதற்கு ஆழமான வரலாறுகள் இருப்பதையும் கொழுமம் பகுதியை சேரர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இருக்கும் போது, கடத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சோழர் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இருக்கும் போது, பாண்டியர்களும் கொங்குப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு இந்தக் கல்வெட்டெழுத்துகள் உறுதியான சான்றுகளாக இருக்கின்றன.

    இந்தத் தகவலை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனியப்பன், வரலாற்றுப் பேராசிரியர் மதியழகன், வரலாற்று ஆசிரியர் ராபின், வி.கே. சிவகுமார், அருட்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சுமார் ரூ.18க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது.
    • 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    கோவை,

    அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.

    பற்றாக்குறையை எதிர்கொள்ள பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஓடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில் சாலை மார்க்கமாக தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுகிறது.

    அரிசி கொள்முதல் மற்றும் வினியோகம் குறித்துஎப்சிஐ கோவை மண்டல மேலாளர் மணிபூஷன்குமார் சுமன் கூறியதாவது:-

    மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவு கழகம் செயல்பட்டு வருகிறது.

    பொதுவினியோக திட்டம்(ரேஷன் கடைகள்), இதர நலத்திட்டங்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் வகையில் விளைச்சல் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு அரிசி, கோதுமையை கொண்டு வருவதில் இந்திய உணவு கழகம் முக்கிய பங்காற்றுகிறது.

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சுமார் ரூ.18க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையின்படி இந்த விலையாணது நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதன்பிறகு அந்த நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது.

    அங்கிருந்து கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    நெல் கொள்முதல், அரவை, போக்குவரத்து, அரிசி சேமிப்பு ஆகியவற்றுக்கு சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.33 செலவாகிறது.

    இந்த செலவீனங்களை முழுமையாக உணவு மானியமாக தமிழக அரசுக்கு இந்திய உணவு கழகம் வழங்குகிறது.

    மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு வழங்கப்படும் அரிசிக்கான செல்வை முழூ மானியமாக மத்திய அரசு மூலம் இந்திய உணவு கழகம் வழங்குகிறது.

    கடந்த ஜனவரிக்கு முன்பு வரை ஒரு கிலோ அரிக்கு மானியம் போக மாநில அரசிடம் இருந்து ரூ.3 பெறப்பட்டு வந்து. கடந்த ஜனவரி முதல் அந்த தொகையையும் மானியமாக மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    67 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் எஞ்சியுள்ளவர்களுக்கு தேவைப்படும் அரிசியை கிலோவுக்கு ரூ.6.10, கோதுமைக்கு ரூ.8.30 அளித்து மாநில அரசு இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக்கொள்கிறது.

    ரத்த சோகையை கட்டுப்படுத்தவும், இரும்பு சத்து, வைட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்கவும், இந்திய உணவு கழகம் மூலம் கடந்த ஏப்ரல் முதல் முழுமையாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    கோவை மண்டல இந்திய உணவு கழகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் மூலம் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பரை 1.48 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது இந்திய உணவு கழகத்தின் மேலாளர்கள் பிஜிமோல், நவநீத கிருஷ்ணன், தன்யா, அபிராமி, ஆத்மசீலன், மவுனிகாக உள்பட பலர் இருந்தனர்.

    • துறை சார்ந்த அலுவலர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் லால் வேனா பார்வையிட்டார்.தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    பின்னர் லால்வேனா கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை மேம்படுத்தும் வித மாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமன்றி துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டு பணிகளின் நிலை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்நத அலுவ லர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

    துறை சார்ந்த அலுவ லர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படை யில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கோவை மாநகர் பகுதிகளில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    கோவை,

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவியதை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    குறிப்பாக கேரளாவையொட்டி இருக்க கூடிய கோவை, நீலகிரி, கன்னியா குமரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது. கேரளா வில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்திலும் மக்களிடம் நிபா வைரஸ் மற்றும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து டெங்கு, நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் கோவை மாவட்டத்தில் எவ்விதமான தொற்றும் பரவாமல் தடுப்பதற்கான மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் கேரளாவையொட்டி இருக்கும் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    மேலும் எல்லையோர கிராம பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரியில் போதுமான அளவிற்கு மருந்துகள் தடுப்பூசிகள் ஸ்டாக் வைத்து கொள்வது, மக்களுக்கு நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி வாரத்தில் 7 நாட்களும் ஒவ்வொரு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. திங்கட்கிழமை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஊர்வலமும், செவ்வாய்கிழமை ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள் ளோம்.

    புதன்கிழமை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, வியாழக்கிழமை ரோடு, வீடு பகுதிகளில் உள்ள டயர்களை அப்புறப்படுத்துதல், வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சனிக்கிழமை வீடு வீடாக சென்று பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படி அறிவுறுத்துவது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    நேற்று கோவை மாநகர் பகுதிகளில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் 100 தொட்டிகளை சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை நகர் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, தெப்பம் துணை மின் நிலையங்களில் நாளை (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பலி, சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சிஎம் ஆர் ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தின புரம், பிக்சர் ரோடு. இந்திரா நகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, எம்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மற்றும் திருமகள் நகர்.

    மேற்கண்ட தகவலை மதுரை நகர் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

    • தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ’ தேவையானதாகும்.
    • நடப்பாண்டு இம்முகாமானது வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வைட்டமின் 'ஏ' ஆரோ க்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.

    இந்த சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும்.

    இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டுதேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் ஏ திரவம் நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் இந்த முகாமானது வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துைற மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறைகளை சார்ந்த கணப்பணியளாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

    இந்த முகாமின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 740 குழந்தை களுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வைட்ட மின் ஏ திரவத்தை அளித்து கண் பார்வை குறைபா டில்லாத இளைய சமுதா யத்தினரை உருவாக்க ஒத்து ழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தை அளித்து கண் பார்வை குறைபா டில்லாத இளைய சமுதா யத்தினரை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    இவற்றுக்கு தக்க சிகிச்சையளிக்கப்பட வில்லை என்றால் பார்வையை பணியாற்ற உள்ளனர். இழக்கநேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் 'ஏ' திரவம் நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவ சமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 'வைட்டமின் ஆரோக்கி யமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ' தேவையானதாகும்.

    நடப்பாண்டு இம்முகாமானது வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.  

    • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
    • எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரிய தர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் மகாராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசுகையில் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கக்கூடாது. விநாய கர் சிலைகளை கரைக்கும் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

    சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். மரங்க ளின் இயற்கை பிசின்களை பயன்படுத்தி சிலைகளை பளபளப்பாக மாற்றலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்களை பயன்படுத்தி வர்ணம் பூசலாம். எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-குந்தா தாலுகாவில் காமராஜர்சாகர் அணை, மசினக்குடி மரவகண்டி அணை, செம்மநத்தம் ஆறு, நடுவட்டம் டி.ஆர்.பஜார் அணை, குன்னூர் தாலு காவில் லாஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரி தாலுகாவில் உயிலட்டி நீர்வீழ்ச்சி, கூட லூர் தாலுகாவில் இரும்பு பாலம், பந்தலூர் தாலுகாவில் பொன்னானி பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    • பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
    • அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 12 மாத பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வரும் 22-ந்தேதி பிற்பகல் 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்திவிட்டு அதற்கான செலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    விண்ணப்பத்தில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட செலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அதில் சுய கையொப்பமிட்டு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அல்லது கொரியர் மூலம் மட்டுமே 22.09.2023 தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இறந்த மாட்டின் உடலில் பூச்சிமருந்து கலந்து சாகடித்தார்
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலிகள் அடித்து கொன்றதால் ஆத்திரம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எமரால்டு நேரு நகர் பாலம் அருகே 2 புலிகளை விஷம் வைத்த கொன்றதாக விவசாயி சேகர் என்ப வரை வனத்து றையினர் கைது செய்த விசா ரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுகுறித்து வனத்துறை யினர் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோத்தகிரி அடுத்த எமரால்டு வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. எனவே அவற்றை டாக் டர்கள் பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புலிகள் இறந்து கிடந்த அதே பகுதியில் ஒரு மாட்டின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதன் உடலிலும் பூச்சிக் கொல்லி மருந்தின் வாசனை தென்பட்டது. எனவே செத்துப் போன மாட்டின் உடம்பில் விஷம் தடவி யாரோ சிலர் புலி களை கொன்று இருக்கலாம் என்று வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சிலரிடம், வளர்ப்பு மாடு காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டது. இதில் எமரால்டு பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டில் ஒரு பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்தது.

    எமரால்டு பகுதியில் சேகர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் விவ சாயம் மற்றும் கால்நடை களையும் வளர்த்து வருகி றார். இந்தநிலையில் அவரது கால்நடைகள் கடந்த 2019-ம் ஆண்டு புலி தாக்கி இறந்து உள்ளன. மேலும் அந்த பகுதியில் பலரின் கால்ந டைகளும் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.

    இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலி கள் தாக்கி அடித்து கொன் றன. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டு உள்ளார். அதனை 8 வயது புலி தின்றதால் உயிரிழந்தது தெரிய வந்து உள்ளது. இதையடுத்து சேகரை வனத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவலாஞ்சி வனப்பகுதியில் தண்ணீரில் இறந்து கிடந்த புலியின் உடலில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அதிக ளவில் இருந்தது. எனவே அது விஷம் கலந்த இறைச் சியை தின்று பலியானது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், புல் தரையில் இறந்து கிடந்த புலி விஷம் தின்றதால் தான் இறந்ததா? என்பது பற்றி இதுவரை உறுதியாக தெரியவில்லை. அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவை சக விலங்குகள் தாக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இருந்த போதிலும் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்த மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×