என் மலர்
உள்ளூர் செய்திகள்

புலியை கொன்றவர் சிக்கியது எப்படி? வனத்துறையினர் திடுக்கிடும் தகவல்
- இறந்த மாட்டின் உடலில் பூச்சிமருந்து கலந்து சாகடித்தார்
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலிகள் அடித்து கொன்றதால் ஆத்திரம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் எமரால்டு நேரு நகர் பாலம் அருகே 2 புலிகளை விஷம் வைத்த கொன்றதாக விவசாயி சேகர் என்ப வரை வனத்து றையினர் கைது செய்த விசா ரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து வனத்துறை யினர் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோத்தகிரி அடுத்த எமரால்டு வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. எனவே அவற்றை டாக் டர்கள் பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புலிகள் இறந்து கிடந்த அதே பகுதியில் ஒரு மாட்டின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதன் உடலிலும் பூச்சிக் கொல்லி மருந்தின் வாசனை தென்பட்டது. எனவே செத்துப் போன மாட்டின் உடம்பில் விஷம் தடவி யாரோ சிலர் புலி களை கொன்று இருக்கலாம் என்று வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சிலரிடம், வளர்ப்பு மாடு காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டது. இதில் எமரால்டு பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டில் ஒரு பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்தது.
எமரால்டு பகுதியில் சேகர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் விவ சாயம் மற்றும் கால்நடை களையும் வளர்த்து வருகி றார். இந்தநிலையில் அவரது கால்நடைகள் கடந்த 2019-ம் ஆண்டு புலி தாக்கி இறந்து உள்ளன. மேலும் அந்த பகுதியில் பலரின் கால்ந டைகளும் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலி கள் தாக்கி அடித்து கொன் றன. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டு உள்ளார். அதனை 8 வயது புலி தின்றதால் உயிரிழந்தது தெரிய வந்து உள்ளது. இதையடுத்து சேகரை வனத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவலாஞ்சி வனப்பகுதியில் தண்ணீரில் இறந்து கிடந்த புலியின் உடலில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அதிக ளவில் இருந்தது. எனவே அது விஷம் கலந்த இறைச் சியை தின்று பலியானது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், புல் தரையில் இறந்து கிடந்த புலி விஷம் தின்றதால் தான் இறந்ததா? என்பது பற்றி இதுவரை உறுதியாக தெரியவில்லை. அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவை சக விலங்குகள் தாக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இருந்த போதிலும் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்த மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






