search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் விபத்தில் இறந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
    X

    குன்னூர் விபத்தில் இறந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

    • புதிய வீட்டின் கிரகபிரவேசத்திற்கு முன்பு பலியான தந்தை-மகள்
    • சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    குன்னூர்,

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 64). இவர் தனது மனைவி, மகள் கவுசல்யா(29), மற்றும் 3 வயது பேத்தியுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இவர் சமீபத்தில் கீழக்கடையத்தில் ஆசை ஆசையாக, புதிய வீடு ஒன்றை கட்டிவந்தார். அந்த வீட்டின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அதற்கு கிரகபிரவேசம் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.

    இந்நிலையில், விடுமுறையையொட்டி தென்காசியில் கணவர் வீட்டில் இருந்த அவரது மகள் கவுசல்யா, சொந்த ஊருக்கு மகளுடன் வந்திருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டதால் இளங்கோ குடும்பத்தினரும் செல்ல விருப்பப்பட்டனர். இதனால் இளங்கோ, நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால் வற்புறுத்தலின்பேரில் அவர்கள் அனைவரும் சுற்றுலாக்கு புறப்பட்டு சென்ற இடத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி கவுசல்யாவும், அவரது தந்தை இளங்கோவும் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

    கடையம் ராமநதி ரோட்டை சேர்ந்த சண்முகையா தனது மனைவி பேபி கலாவுடன்(36) சென்றுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறான். இளைய மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான்.

    தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி இளைய மகன், அந்த பகுதியில் உள்ளவர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளான்.

    மேலும் பேபிகலாவும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றதில்லை. இதனால் அவர் தனது மூத்த மகனை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவர் மற்றும் இளைய மகனுடன் புறப்பட்டு சென்றுள்ளார். அவ்வாறு சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    Next Story
    ×