search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvSA"

    • ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது.

    கிளாசன் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 49 ரன்னும் (8 பவுண்டரி), ஸ்ரேயாஸ் அய்யர் 23 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி, போஜனுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    இந்த வெற்றி மூலம் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடரையும், ஒரு நாள் தொடரையும் இழந்தது.

    நேற்றைய வெற்றி மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்தது.

    அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இந்த ஆண்டில் 38 வெற்றியை பெற்றுள்ளது. டெஸ்டில் 2, ஒருநாள் போட்டியில் 13, 20 ஓவர் ஆட்டத்தில் 23 என 38 வெற்றி கிடைத்துள்ளது.

    2003-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் இந்திய அணி 37 வெற்றிகளை பெற்று இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும். * * * தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கோப்பையுடன் கேப்டன் ஷிகர் தவான் இருப்பதை படத்தில் காணலாம்.

    • தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
    • இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஐபிஎல் இந்த சீசன் எனது நம்பிக்கையை உயர்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா-ஏ அணிக்காகவும் சிறப்பாக பந்து வீசினேன்.

    நீங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளைப் பெறுவீர்கள், சில நேரங்களில் நீங்கள் விக்கெட்டுகளைப் பெறுவதில்லை. இருப்பினும் என் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 99 ரன்களில் சுருண்டது
    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக முன்னேறியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 10 ரன்களில் வெளியேறினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மான் கில், 49 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களும் எடுக்க, 19.1 ஓவரிலேயே இந்தியா இலக்கை எட்டியது. 19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

    • குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலான் - டிகாக் ஆடினர். 6 ரன்னில் இருந்த டி காக் 1 பவுண்டரியுடன் வாஷிங்டன் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஹெண்டிரிக்ஸ் 3 ரன்னிலும் மார்க்ரம் 9 ரன்னில் நடயைக் கட்டினர்.

    இதனையடுத்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மலான் 15, மில்லர் 7, பெஹ்லுக்வாயோ 5, கிலாசன் 34, ஃபார்டுயின் 1, நோர்க்யா 0 என ஆட்டமிழந்தனர்.

    இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்கா அணியில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை.
    • இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்த தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி இதுவாகும். இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை. அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் செயல்படுகிறார்.

    இந்திய அணி:-

    ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்

    தென் ஆப்பிரிக்கா அணி:-

    குயின்டன் டி காக், ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே

    • தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்ப்பு.
    • இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

    தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதில் இருந்தால் அதை செய்யுங்கள்.
    • சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.

    ராஞ்சி:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் கூறியதாவது:

    சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன். 


    எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராஞ்சி:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.

    அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது.

    பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும்.

    இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ஹென்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    ராஞ்சி:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. டி காக் 5 ரன்னில் அவுட்டானார். மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஹென்ரிக்சுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், கிளாசன் 30 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும், பார்னெல் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • தீபக் சாஹர் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2-வது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.

    • நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர்.
    • ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர்.

    லக்னோ:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது.

    இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 75 ரன்னும், கிளாஸ்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் (4 ரன்), சுப்மன் கில் (3), ருதுராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷன் (20) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஸ்ரேயாஸ் அய்யர்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. அதில் சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்னே எடுத்தார்.

    இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா 9 ரன் வித்தியாசத்தில் வென்றது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர். பீல்டிங் சிறப்பாக அமையவில்லை.

    தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. வேகமும் இருந்தது.

    இதனால் 250 ரன் இலக்கு என்பது அதிகமானது என்று நினைத்தேன். பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.

    சஞ்சு சாம்சன் கூறும் போது, நடு ஓவர்களில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி அதிக ரன் விட்டு கொடுத்தார். எனவே அவரை இலக்கு வைத்து விளையாடினேன்.

    கடைசி ஓவரை ஷம்சி வீசுவார் என்று எங்களுக்கு தெரியும். கடைசி ஓவரில் 24 ரன் எடுக்க வேண்டி இருந்திருந்தால் அதில் நான்கு சிக்சர் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். இரண்டு ஷாட்களை அடிக்க தவறிவிட்டேன். அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்வேன். ஆனால் எனது பங்களிப்பில் நான் திருப்தியடைந்தேன் என்றார்.

    3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஆட்டம் வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.

    • அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    • கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.

    லக்னோ:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர்.

    இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8 ரன்களில் துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. அதாவது ஷூப்மான் கில் 3 ரன்னிலும், கேப்டன் ஷிகர் தவான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும், இஷான் கிஷன் 20 ரன்களும் சேர்த்தனர்.

    ஸ்ரேயாஸ் அய்யர்

    ஸ்ரேயாஸ் அய்யர்

    அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். போதுமான ரன்ரேட் இல்லாமல் தவித்த நிலையில், சஞ்சு சாம்சன்-ஷர்துல் தாக்கூர் ஜோடி நம்பிக்கை அளித்தது. நெருக்கடிக்கு மத்தியில் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்த ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இதனால் ரன்ரேட் உயர்ந்தது. எனினும் இலக்கை எட்ட முடியவில்லை.

    மறுமுனையில் ஆடிய ஷர்துல் தாக்கூர் 33 ரன்களில் அவுட் ஆனதையடுத்து, ஆட்டத்தின் போக்கு மாறியது. குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் வெளியேறினார். ஆவேஷ் கான் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 

    சஞ்சு சாம்சன்

    சஞ்சு சாம்சன்

    கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை ஷாம்சி வீசினார். முதல் பந்து வைடு ஆனது. இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரவி பிஷ்னோய் சிக்சர் அடித்தார். இரண்டாவது மற்றும் 3வது பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் மொத்தம் 20 ரன்கள் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் மொத்தம் 86 ரன்கள் குவித்தார்.

    கடைசி வரை போராடிய இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி 9ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.

    ×