search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவை 99 ரன்னில் சுருட்டியது இந்திய அணி
    X

    தென் ஆப்பிரிக்காவை 99 ரன்னில் சுருட்டியது இந்திய அணி

    • குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலான் - டிகாக் ஆடினர். 6 ரன்னில் இருந்த டி காக் 1 பவுண்டரியுடன் வாஷிங்டன் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஹெண்டிரிக்ஸ் 3 ரன்னிலும் மார்க்ரம் 9 ரன்னில் நடயைக் கட்டினர்.

    இதனையடுத்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மலான் 15, மில்லர் 7, பெஹ்லுக்வாயோ 5, கிலாசன் 34, ஃபார்டுயின் 1, நோர்க்யா 0 என ஆட்டமிழந்தனர்.

    இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×