search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
    X

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

    • தீபக் சாஹர் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2-வது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.

    Next Story
    ×