search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income"

    • மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
    • 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

    கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    உண்டியலில் காணிக்கையாக ரூ.833.41 கோடி செலுத்தினர். 2022-23 நிதி யாண்டின் படிகடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி முடிந்து 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    • தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
    • கல் தயார் செய்யவும் முடியவில்லை, தயார் செய்த கல்லை காய வைக்கவும் முடியவில்லை.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கோடைமழை காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.

    பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், சுரைக்காயூர், கோடுகிளி மற்றும் ஒன்பத்துவேலி உள்பட பல இடங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வரும் திடீர் கோடை மழையால் செங்கல் உற்பத்தி செய்யும் பணி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது இதனால் செங்கல் உற்பத்தி செய்யும்பணியில் ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்கள் தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து செங்கல் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது

    பொதுவாக கோடை காலத்தில் தான் எங்களுக்கு செங்கல் தயார் செய்ய முடியும் இரண்டு பேர் சேர்ந்து ஆயிரம் பச்சகல் தயார் செய்யலாம் ஆயிரம் கல் தயார் செய்யலாம் அந்த கல்லை நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து கொட்டகையில் அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்வரை கூலியாக கிடைக்கும் தற்போது தினசரி பெய்து வரும் மழையால் கடந்தசில நாட்களாக தயார் செய்து வைத்து பச்ச கல் எல்லாம் நனைந்து சேதமடைந்நு விட்டது தொடர்ந்து கல் தயார் செய்யவும் முடியவில்லை தயார் செய்த பச்ச கல்லையும் காயவைக்கவும் முடியவில்லை அதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்

    செங்கல் தயார் செய்யும் தொழிலை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் மழையால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
    • கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.

    மேற்கண்ட விவரங்களை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.

    • பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 682 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக் கட்டாக்களில் 24 ஆயிரத்து 291 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 32 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.
    • நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    திருமலை :

    ஆந்திராவில் கொரோனா தொற்று இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் காணிக்கையும் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.123 கோடி கிடைத்துள்ளது.

    அதில் ஜனவரி மாதம் 2-ந்தேதி ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.7 கோடியே 68 லட்சம் கிடைத்தது. இது, தேவஸ்தான வரலாற்றில் அதிகமாகும். உண்டியல் வருமானத்தைபோல் ஏழுமலையானுக்கு இதர காணிக்கைகளும் பெரிய அளவில் பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள். அதில் கிலோ கணக்கில் தங்கத்தை பக்தர்கள் பிரதான உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது தொடர்கிறது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.

    தற்போது நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. கோவிலில் நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 939 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 203 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 17 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • நாளை முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-

    இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சங்கராந்தி. இந்தத் திருநாளில் அனைத்துப் பக்தர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை பிரமாண்டமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு, குடிநீர், காபி, டீ, பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 20 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.129.37 கோடி கிடைத்தது. 1 கோடியே 8 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. 38 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 8 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டில் ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.1450.41 கோடி கிடைத்துள்ளது. 11 கோடியே 54 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 77 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 1 கோடியே 9 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.
    • 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமலை

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.

    2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 லட்சத்து 96 ஆயிரத்து 93 பக்தர்களும், பிப்ரவரியில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்களும், மார்ச் மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 741 பக்தர்களும், ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 915 பக்தர்களும், மே மாதம் 22 லட்சத்து 61 ஆயிரத்து 641 பக்தர்களும், ஜூன் மாதம் 23 லட்சத்து 23 ஆயிரத்து 421 பக்தர்களும், ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரத்து 319 பக்தர்களும், ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 184 பக்தர்களும், செப்டம்பர் மாதம் 21 லட்சத்து 12 ஆயிரத்து 254 பக்தர்களும், அக்டோபர் மாதம் 22 லட்சத்து 74 ஆயிரத்து 265 பக்தர்களும் நவம்பர் மாதம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 816 பக்தர்களும், டிசம்பர் மாதம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 108 பக்தர்களும் (29-ந்தேதி வரை) என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    • மண்டல பூஜை இன்று நடக்கிறது.

    நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது.

    மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி.
    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, கோவி ல்தேவராயன்பேட்டையில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி மற்றும் பள்ளிக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடராஜா அரசு உதவிபெறும்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விவேகானந்தா சமூக கல்வி சங்க தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமொழிதமிழ்வாணன், தலைமை ஆசிரியர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் புனிதா அனைவரையும் வரவேற்றார்.

    இதில் விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க.கண்ணதாசன், கலந்து கொண்டு மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகளுக்கு ஆளுமை திறன், நிதிமேலாண்மை நிர்வாகம், மக்கள் தொடர்பு, தொழில் வேலைவாய்ப்பு , நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி , இன்சுரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு, வீடு,வாகனம்.

    கால்நடைகள், தனிநபர் காப்பீடு செய்வது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் முன்னோடி குழு நிர்வாகிகள் விஜி, வளர்மதி, கவிதேவி, தமிழரசி, சிவகாமசுந்தரி, கலா, ரமணி உள்பட 50 -க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் நடராஜா உதவிபெறும்பள்ளி வளர்ச்சிக்கு விவேகானந்தா சமூக கல்விசங்கம் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் காசிராமன்,ராஜாங்கம்,களப்பணியாளர்கள் புனிதா, செல்வி,மணி. ராதிகா, லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது.
    • ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேண்டுதலாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் வருகிறது.

    அதன்படி கடந்த மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.100 கோடியைத் தாண்டியது. ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது. ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.122.8 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

    • பேராவூரணி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்.
    • பல குடும்பங்கள் கால்நடைகளை இழந்து வருமானமின்றி தவித்து வந்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்ற ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் திடீரென இறந்து விட்டது.

    இதனால் பல குடும்பங்கள் கால்நடைகளை இழந்து வருமானமின்றி தவித்து வந்தனர். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் உள்ள கால் நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • கடந்த மாதம் 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக் கடன் வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில் கடந்த மாதம் தினமும் ரூ.4 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது. அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானது.

    22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.

    கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.139.33 கோடி உண்டியல் வசூலானது.

    ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூலானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

    இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.1500 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×