search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPhone X"

    ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneX



    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது. இதே ஆலையில், ஏற்கனவே ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்தால் விற்பனை அதிகரிக்கும் என ஆப்பிள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபோன் X உற்பத்தி ஜூலை 2019 இல் துவங்கலாம் என தெரிகிறது.

    இந்தியாவில் ஐபோன் X மாடலை தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடலை உற்பத்தி செய்ய சென்னை அருகே அமைந்திருக்கும் ஆலையில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.



    முதற்கட்டமாக ஐபோன் X உற்பத்தி துவங்கியதும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய பொது தேர்தலுக்கு பின் உருவாகும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பொருத்தே இவை எந்தளவு சாத்தியப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

    இதுவரை விஸ்ட்ரண் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 29 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ததாக இந்திய டெல்லுலார் மற்றும் மின்னணு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம்  5.8 கோடி யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது.
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. #Samsung



    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் சாம்சங், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆப்பிள் மீது வழக்கு தொடர்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.

    சாம்சங் மற்றும் ஆப்பிள் இடையே சட்டப்பூர்வமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சாம்சங் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. வழக்கமாக ஆப்பிள் மீது வழக்கு பதிவு செய்யும் சாம்சங், இம்முறை ஆப்பிள் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

    ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் நியமித்த பெண் விளம்பர தூதர் மீது தான் சாம்சங் வழக்கு பதிவு செய்துள்ளது. ரஷ்யாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் செனியா சொப்சாக் சாம்சங் நிறுவன விளம்பர தூதராக இருக்கிறார். 

    சாம்சங் நிறுவனத்துடன் இவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் சொப்சாக் பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சொப்சாக் சாம்சங் நிறுவனத்துக்கு 16 லட்சம் டாலர்கள் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.


    புகைப்படம் நன்றி: CEN

    சாம்சங் நிறுவன விளம்பர தூதராக இருக்கும் நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐபோன் X பயன்படுத்தியது, மேலும் சில பொது நிகழ்ச்சிகளில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் நிறுவனம் சார்பில் சொப்சாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும், தனது விளம்பர தூதர் பல்வேறு சமயங்களில் பொது வெளியில் ஐபோன் X பயன்படுத்தியதால் சாம்சங் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

    சமூக வலைதளம் மற்றும் பொது வெளியில் தங்களது சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரான்டு நிறுவனங்கள் சார்பில் பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிக்கும் வழக்கம் பொதுவான ஒன்று தான். சில விளம்பர தூதர்கள் தங்களது ஒப்பந்தத்தின் படி பொது வெளியில் போட்டி நிறுவன சாதனங்களை பயன்படுத்த மாட்டோம் என குறிப்பிட்டு இருப்பர்.

    அந்த வகையில் விளம்பர தூதராக இவ்வாறு செய்து சிக்கிக் கொண்ட முதல் நபராக சிப்சொக் இருக்கலாம். எனினும் ஐபோன் X பயன்படுத்தினால் ரூ.11 கோடி வரை செலவிட நேரிடும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.
    ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து, ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன்களின் விலையை குறைத்துள்ளது. #iPhoneX



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்து, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க விரும்புவோர் ஆவலுடன் எதிர்பார்த்த தகவலை ஆப்பிள் அறிவித்தது. மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்ததுடன் ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன் X உள்ளிட்ட மால்களின் விலையை குறைப்பதாக அறிவித்தது.

    சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.29,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல் ரூ.34,900 முதல் துவங்குகிறது. ஐபோன் மாடல்களின் புதிய விலை ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் X உள்ளிட்ட மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் எஸ்.இ. விற்பனை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

    புதிய விலையை பொருத்த வரை ஐபோன் X மாடலின் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.91,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,06,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் X விலை ரூ.95,390 என்றும் ரூ.1,08,930 விலையில் விற்பனை செய்யப்பட்டது.



    இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 64 ஜிபி ஐபோன் 8 மாடல் ரூ.59,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் ரூ.74,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல்கள் ரூ.67,940 மற்றும் ரூ.81,500 விலையில் விற்பனை செய்யப்பட்டன.

    ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.69,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் ரூ.77,560 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 256 ஜிபி வேரியன்ட் ரூ.91,110 விலையில் இருந்து ரூ.6,210 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.84,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன் 2016-ம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 32 ஜிபி ஐபோன் 7 விலை ரூ.39,900 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல்கள் முன்னதாக ரூ.52,370 மற்றும் ரூ.61,560 விலையில் விற்பனை செய்யப்பட்டன. 

    இதேபோன்று ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி வேரியன்ட் ரூ.49,900 மற்றும் 128 ஜிபி ரூ.59,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு OLED பேனல்களை இந்த சீன நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #iPhoneX



    ஆப்பிள் நிறுவன ஐபோன் X மாடலுக்கு சாம்சங் நிறுவனம் OLED பேனல்களை வழங்கி வருகிறது. OLED பேனல்களுக்கு சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நம்பியிருக்கும் நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் OLED பேனல்களை சீன நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி திறனை மேம்படுத்துவதன் விளைவாக சீன நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் BOE தொழில்நுட்ப குழுமம் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களுக்கு OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே சீனாவின் BOE நிறுவனம் ஆப்பிள் நிறுவன ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களுக்கு பெரிய LCD ஸ்கிரீன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்துக்கான விநியோகத்தை பெய்ஜிங் நகர அரசு மூலம் கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு உபகரணம் வழங்கும் ஒற்றை சீன நிறுவனமாக இருக்கிறது.


    கோப்பு படம்

    புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனம் மற்றும் சீன அரசாங்கத்திடையேயான உறவு மேம்படும் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளே-ஸ்கிரீன் உற்பத்தியில் BOE நிறுவனத்தை பொருத்த வரை தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடனான போட்டியில் சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறது. 

    இதேபோன்று சீன நிறுவனம் மட்டுமின்றி எல்ஜி நிறுவனமும் சுமார் 20 முதல் 40 லட்சம் OLED பேனல்களை ஆப்பிள் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மாடலுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதேபோன்று சாம்சங் நிறுவனமும் ஐபோன்களுக்கு OLED பேனல்களை விநியோகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

    ஆப்பிள் எதிர்பார்க்கும் அதிக தரமுள்ள உபகரணங்களை வழங்கக் கூடிய பட்சத்தில் BOE நிறுவனத்திடம் இருந்து டிஸ்ப்ளே ஸ்கிரீன்களை ஆப்பிள் நிறுவனம் வாங்குவது ஆப்பிள் நிறுவனம் மற்றும் சீனாவுடன் நட்புறவை மேம்படுத்த வழி செய்யும். சீனாவின் BOE நிறுவனம் பீஜிங் நகர அரசு சார்ந்தது என்பதோடு அதன் பெரிய பங்குதாரர்களாக மாநிலம் இணைந்த நிறுவனங்கள் இருக்கின்றன. #Apple #iPhoneX

    புகைப்படம் நன்றி: PIXABAY
    ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் X விளம்பர வீடியோ மீது சந்தேகம் கொண்ட ப்ரிட்டன் விளம்பர ஆணையம், தகுந்த ஆய்வுக்கு பின் ஆப்பிளிடம் சரண்டர் ஆகியிருக்கிறது.
     


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றாலே அதன் கேமரா அம்சங்கள், இதர நிறுவன ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்டு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கேமரா சார்ந்த விஷயத்தில் ஆப்பிள் அதிக அக்கறை செலுத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X மாடலிலும் தலைசிறந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.

    சமீபத்தில் தனது ஐபோன் X மாடலுக்கான விளம்பர வீடியோவினை ஆப்பிள் வெளியிட்டிருந்தது. இதில் ஐபோன் X கொண்டு ஸ்டூடியோ தர போர்டிரெயிட் புகைப்படங்களை படமாக்க முடியும் என ஆப்பிள் குறிப்பிட்டிருந்தது. வீடியோவை பார்த்து அதிர்ந்து போன விளம்பர தர நிர்ணய ஆணையம் ஆப்பிள் ஐபோன் X மாடலின் ஸ்டூடியோ தர போர்டிரெயிட் அம்சத்தை எங்களால் நம்ப முடியாது என பகிரங்கமாக தெரிவித்தது.

    ப்ரிட்டனை சேர்ந்த விளம்பர தர நிர்ணய ஆணையம் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்ததை போன்று ஆப்பிள் வெளியிட்டிருக்கும் விளம்பரம் திசைத்திருப்பும் வகையில் இருப்பதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக புதிய தகவல் பதிவிடப்பட்டு இருக்கிறது. 



    அதில் ஐபோன் X மாடலின் விளம்பரங்களில் ஆப்பிள் நிறுவனம் ஸ்டூடியோ தர போர்டிரெயிட்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என விளம்பர தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, ஐபோன் X மாடலில் உள்ள 50மில்லிமீட்டர் ஃபோக்கல் லென்ஸ் பிரபல ஸ்டூடியோ போர்டிரெயிட் லென்ஸ் ஆக இருக்கிறது, இத்துடன் லைட்டிங் ஆப்ஷன்களும் ஸ்டூடியோவில் உள்ளதை போன்று வேலை செய்கிறது.

    விளம்பர தர நிர்ணய ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களில், “ஸ்டூடியோ தர புகைப்படங்களை எடுக்கத் தேவையான பல்வேறு எஃபெக்ட்கள், நுட்பங்கள் மற்றும் டூல்கள் இருப்பதை உணர்ந்தோம், எனினும் இவை ஐபோன் X மட்டும் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. எனினும், அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுக்கத் தேவையான லைட்டிங் எஃபெக்ட்கள் இருப்பதை அறிந்து கொண்டோம். மேலும் இவை அனைத்தும் ஐபோன் X கேமரா மூலம் எடுக்கப்பட்டது என்பதையும் புரிந்து கொண்டோம்,” என தெரிவித்திருக்கிறது.

    ஆப்பிள் வெளியிட்ட விளம்பர வீடியோவை கீழே காணலாம்..,

    ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை 'ஓவர்டேக்' செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இருக்கிறது.




    ஸ்மார்ட்போன்களில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்பதில் விவோ தனது வழக்கமாக்கி வருகிறது.

    விவோ சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் கேமரா போன்ற அம்சங்களை வழங்கியுள்ளது. 

    ஷாங்காய் நகரில் துவங்கியிருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ் ஐடி போன்று வேலை செய்யும் புதிய அம்சம் ஐபோன் X-ஐ விட சிறப்பாகவும், மிக துல்லியமாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



    விவோ அறிமுகம் செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள 3D டெப்த் சென்சிங் சிஸ்டம் 3,00,000 சென்சார் பாயின்ட்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் உள்ள டைம் ஆஃப் ஃப்ளைட்' (Tof) அம்சத்தை பயன்படுத்தி இந்த அம்சம் வேலை செய்கிறது. 

    தி வெர்ஜ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விவோவின் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் இருந்து முகம் 3 மீட்டர் தொலைவில் இருந்தாலும் சீராக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் ஆஃப் ஃப்ளைட் 3D சென்சிங் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைத்து, எதிர்காலத்தில் புதிய அம்சங்களை கண்டறிவதாக விவோ தெரிவித்துள்ளது.

    எதிர்கால ஸ்மார்ட்போன்களில் ஜெஸ்ட்யூர் மற்றும் மோஷன் ரெகஃனீஷன்களில் புதிய சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் கான்செப்ட் கிடையாது என்றும் இதனை அதிகளவு தயாரிக்க தயார் நிலையில் இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் ஒன்று எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X பயனர்களை கவர்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், சிலர் இதன் விலை பட்டியலை பார்த்து பதறவே செய்தனர். அதிக விலை குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்ட ஆப்பிள், ஒருவழியாக பயனர் விரும்பும் விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான அமெரிக்க செய்தி தாள் ஒன்றில் புதிய ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் எல்சிடி டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட சாதனங்கள் ஐபோன் விற்பனையை ஊக்குவிக்கும் என ஆப்பிள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த ஐபோன் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. விலை குறைந்த ஸ்மார்ட்போனாக 6.1 இன்ச் ஐபோன் மாடல் இந்தியா போன்று விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெறும் சந்தைகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.


    கோப்பு படம்

    அந்த வகையில் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முன்பு எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் இதே டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஐபோன் X மாடல்களில் OLED பயன்படுத்திய திட்டம் ஆப்பிள் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்தது. குறிப்பாக ஐபோன் X விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதோடு, எல்சிடி டிஸ்ப்ளேக்களை பயன்படுத்திய ஐபோன் 7 ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் இருக்கின்றன.

    ஆப்பிளின் விலை உயர்ந்த ஐபோன் X விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதே விற்பனை குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்ற ஐபோன்களின் விலை காரணமாகவே அவற்றின் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
    6.5 இன்ச் அளவு கொண்ட ஐபோன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய மாடல் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    கேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.


    புகைப்படம்: நன்றி OnLeaks

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

    2018 6.5 இன்ச் ஐபோனின் முதல் வீடியோவை கீழே காணலாம்..,


    சீனாவில் மே 16-ம் தேதி வெளியாக இருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா X6 என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிவித்து ஸ்மார்ட்போனினை சேன்லிடன் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் காட்சிப்படுத்தியது.

    நோக்கியா TA-1099 ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்தது. தற்சமயம் நோக்கியா X6 என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் சான்று பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 மற்றும் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டுள்ளது.



    இதுதவிர நோக்கியா TA-1075, TA-1105 மற்றும் TA-1116 மூன்று மாடல்கள் ரஷ்யாவில் சான்றளிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.



    நோக்கியா X6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி ரேம்
    - 32ஜிபி / 64ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஸ்மார்ட்போன் அறிமுக தினத்தில் முழு விவரங்களும் தெரியவரும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஐபோன் எஸ்இ 2 அம்சங்கள், கான்செப்ட் மற்றும் ரென்டர்கள் லீக் ஆகிவருகின்றன.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இவ்விழாவில் புதிய ஐபோன் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ (2018) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலில் முன்பக்கம் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 



    குறிப்பாக ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

    மேலும் புதிய எஸ்இ ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×