search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband complaint"

    குற்றாலத்தில் மகனுடன் கடைக்கு சென்ற தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குற்றாலம்:

    குற்றாலம் அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணபெருமாள். இவரது மனைவி சத்யா (வயது 25). இவர்களது மகன் விமல் (4). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்யா தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பிறகு சத்யாவையும் அவரது மகன் விமலையும் காணவில்லை.

    இவர்களை யாரேனும் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கண்ணபெருமாள், குற்றாலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இவர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி ரெட்டியூரை சேர்ந்தவர் சம்பத். எலெக்ட்ரீசியன். இவரது மனைவி சரண்யா (வயது 28). இவர்களுக்கு நிக்‌ஷதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் சரண்யா கடந்த 7-ந் தேதி கோபித்துக்கொண்டு மகள் நிக்‌ஷதாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சம்பத் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரண்யாவுக்கும், சம்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், தான் நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலும் மகளுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

    காணாமல் போன அன்று சரண்யா கருப்பு நிற சுடிதாரும், நிக்‌ஷதா மஞ்சள் நிற பிராக்கும் அணிந்திருந்தனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    கே.வி.நல்லூர் அருகே மகனுடன் கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டகுமாரராஜா (வயது 42). இவரது மனைவி விநாயகலெட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு மகன் உள்ளான். மணிகண்டகுமாரராஜா கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகனுடன் கடைக்கு சென்ற விநாயகலெட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது பற்றி மணிகண்டகுமாரராஜா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு, நேதாஜி ரோடு, முனிசிபல்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சுஜா (வயது 42).

    இவர் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடினர்.

    ஆனால் சுஜா கிடைக்கவில்லை. அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. எனவே அவர் திடீரென மாயமானது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் முரளி புகார் செய்தார்.

    மாயமான தனது மனைவி சுஜாவை கண்டுபிடித்து தருமாறு அதில் அவர் கூறி உள்ளார். அதன் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுஜாவை தேடி வருகின்றனர்.

    இதேபோல் சென்னிமலையை அடுத்துள்ள அம்மாபாளையம் அன்புநகர் பகுதியில் வசிப்பவர் முனியப்பன்- மாரியம்மாள் தம்பதி.

    இவர்களின் மகள் விஜயலட்சுமி (13). இவர் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பொது கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாரியம்மாள் தனது மகளை காண வில்லை என சென்னிமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரையில் 4 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சொக்கலிங்கநகர் காளியம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கார்த்தீஸ்வரி (28). இருவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பொன்மதி (9), குணசீல் (8) ஆகிய 2 மகள்களும், மதன்பாண்டியன்(7), கிஷோர்ராஜ் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    கடந்த 12-ந் தேதி காலை கார்த்தீஸ்வரி, கணவருடன் கோபித்துக் கொண்டு மதுரை மேல அண்ணாத்தோப்பில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அப்போது தனது 4 குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

    ஆனால் அவர், பாட்டி வீட்டுக்கு போகாமல் எங்கேயோ சென்று விட்டார். கார்த்தீஸ்வரி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கார்த்தீஸ்வரியின் கணவர் ராஜ் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து 4 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    பாவூர்சத்திரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கடங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பொன்னரசி (வயது23). ரமேஷ் கேரளாவில் சலூன் கடை வைத்துள்ளார். பொன்ன ரசியும் கணவருடன் கேரளாவில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னரசி அவரது சகோதரருடன் கடங்கனேரியில் உள்ள சொந்த ஊருக்கு வந்தார். இங்கு கடந்த 7ந்தேதி பொன்னரசி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக போனவர் மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.

    இதுகுறித்து ரமேஷ் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    குன்னத்தூர் அருகே சந்தைபாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும் நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை சேர்ந்த சிவண்ணன் மகள் சுதா (22) என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    கடந்த 2 நாட்களுக்கு முன் மதியம் சத்தியமூர்த்தி சாப்பிட சென்றபோது வீடு பூட்டியிருந்தது. மனைவி சுதாவை செல்போனில் தொடர்புகொண்டபோது தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். மீண்டும் மாலை உன்னுடன் வாழ பிடிக்கவில்லை நான் எங்கோ செல்கிறேன் என எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். உடனே சத்தியமூர்த்தி தோழி வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடியபோது எங்கும் இல்லாததால் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குபதிவு செய்து சுதாவை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே மகனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை மெயின்ரோட்டை சேர்ந்தவர் முச்சாண்டி. இவரது மனைவி சாந்தி(வயது35), மகன் ரித்திக்(11). முச்சாண்டி கொடைக்கானலில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று முச்சாண்டி விடுமுறையில் வீடு திரும்பியபோது மகன் மற்றும் மனைவி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சாந்தி மற்றும் ரித்திக்கை தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கியில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம், புதுகாலணியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) இவர் வெளியூரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (வயது 26). இவர்களுக்கு புவனாட்சி(8), கிருத்திகா(4) என்ற 2 மகள்களும் அருள்பிரகாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ராதிகா கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார்.

    28-ந் தேதி வீட்டின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 குழந்தைகளின் ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    அப்போது பிரபாகரன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மனைவி குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    பிரபாகரன் இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    சங்கராபுரம் அருகே மொட்டை மாடியில் தூங்கிய இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவன் போலீசார் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    சங்கராபுரம் அடுத்த மேல்புதூரை சேர்ந்தவர் மணிமாறன்(26), இவருக்கும் திருவண்ணாமலை பள்ளி கொண்டாப்பட்டு ஆனந்தன் மகள் ஜான்சிராணி (வயது 22) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு, கணவன்- மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இருவீட்டாரும் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்ததால், இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினர்.

    நள்ளிரவு 1 மணியளவில் மணிமாறன் எழுந்து பார்த்தபோது, ஜான்சிராணியை காணவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து மணிமாறன் கொடுத்துள்ள புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×