search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கராபுரம் அருகே இளம்பெண் மாயம்: போலீசில் கணவன் புகார்
    X

    சங்கராபுரம் அருகே இளம்பெண் மாயம்: போலீசில் கணவன் புகார்

    சங்கராபுரம் அருகே மொட்டை மாடியில் தூங்கிய இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவன் போலீசார் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    சங்கராபுரம் அடுத்த மேல்புதூரை சேர்ந்தவர் மணிமாறன்(26), இவருக்கும் திருவண்ணாமலை பள்ளி கொண்டாப்பட்டு ஆனந்தன் மகள் ஜான்சிராணி (வயது 22) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு, கணவன்- மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இருவீட்டாரும் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்ததால், இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினர்.

    நள்ளிரவு 1 மணியளவில் மணிமாறன் எழுந்து பார்த்தபோது, ஜான்சிராணியை காணவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து மணிமாறன் கொடுத்துள்ள புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×