search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே மகனுடன் இளம்பெண் மாயம்
    X

    தேவதானப்பட்டி அருகே மகனுடன் இளம்பெண் மாயம்

    தேவதானப்பட்டி அருகே மகனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை மெயின்ரோட்டை சேர்ந்தவர் முச்சாண்டி. இவரது மனைவி சாந்தி(வயது35), மகன் ரித்திக்(11). முச்சாண்டி கொடைக்கானலில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று முச்சாண்டி விடுமுறையில் வீடு திரும்பியபோது மகன் மற்றும் மனைவி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சாந்தி மற்றும் ரித்திக்கை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×