search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் இளம்பெண் மாயம்
    X

    பாவூர்சத்திரத்தில் இளம்பெண் மாயம்

    பாவூர்சத்திரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கடங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பொன்னரசி (வயது23). ரமேஷ் கேரளாவில் சலூன் கடை வைத்துள்ளார். பொன்ன ரசியும் கணவருடன் கேரளாவில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னரசி அவரது சகோதரருடன் கடங்கனேரியில் உள்ள சொந்த ஊருக்கு வந்தார். இங்கு கடந்த 7ந்தேதி பொன்னரசி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக போனவர் மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.

    இதுகுறித்து ரமேஷ் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×