search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.வி.நல்லூர் அருகே மகனுடன் இளம்பெண் மாயம்
    X

    கே.வி.நல்லூர் அருகே மகனுடன் இளம்பெண் மாயம்

    கே.வி.நல்லூர் அருகே மகனுடன் கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டகுமாரராஜா (வயது 42). இவரது மனைவி விநாயகலெட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு மகன் உள்ளான். மணிகண்டகுமாரராஜா கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகனுடன் கடைக்கு சென்ற விநாயகலெட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது பற்றி மணிகண்டகுமாரராஜா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×