search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னத்தூர் அருகே தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
    X

    குன்னத்தூர் அருகே தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

    தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    குன்னத்தூர் அருகே சந்தைபாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும் நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை சேர்ந்த சிவண்ணன் மகள் சுதா (22) என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    கடந்த 2 நாட்களுக்கு முன் மதியம் சத்தியமூர்த்தி சாப்பிட சென்றபோது வீடு பூட்டியிருந்தது. மனைவி சுதாவை செல்போனில் தொடர்புகொண்டபோது தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். மீண்டும் மாலை உன்னுடன் வாழ பிடிக்கவில்லை நான் எங்கோ செல்கிறேன் என எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். உடனே சத்தியமூர்த்தி தோழி வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடியபோது எங்கும் இல்லாததால் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குபதிவு செய்து சுதாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×