search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலத்தில் மகனுடன் தாய் கடத்தல்
    X

    குற்றாலத்தில் மகனுடன் தாய் கடத்தல்

    குற்றாலத்தில் மகனுடன் கடைக்கு சென்ற தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குற்றாலம்:

    குற்றாலம் அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணபெருமாள். இவரது மனைவி சத்யா (வயது 25). இவர்களது மகன் விமல் (4). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்யா தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பிறகு சத்யாவையும் அவரது மகன் விமலையும் காணவில்லை.

    இவர்களை யாரேனும் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கண்ணபெருமாள், குற்றாலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×