search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aranthangi"

    • தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
    • பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    நேற்று இரவு இந்த நீர் மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதில் பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனியப்பன், தி.மு.க. நிர்வாகி ராமநாதன் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
    • இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை. 2-வது நாளான நேற்று முன்தினம் சுயேட்சையாக போட்டியிட கூத்தன் என்ற தெய்வநீதி என்பவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 3-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.


    ஆனால் கடைசி நேரத்தில் அவர் வேட்பு மனுவை வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதுதவிர, நேற்று சுயேட்சையாக கூட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. புதுச்சேரியில் 3 நாள் முடிவில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

    மனு தாக்கல் பெறுவதற்கு 25, 26, 27 என 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் வருகிற 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முகூர்த்த நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என எண்ணி உள்ளனர்.

    அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வருகிற 27-ந் தேதி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.

    • டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
    • கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நூதன முறையில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    நாகுடியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெருங்காடு, மேலப்பட்டு, அறந்தாங்கி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து விக்னேஷ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தது. அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களோடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபிராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரை முருகன், யோகராஜ், கோபிநாத் தனசிங், உதயகுமார் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #PeriyarStatueVandalised
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.

    பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். சிலையின் தலைபகுதியை இரண்டு துண்டுகளாக உடைத்து அதே இடத்தில் வீசி இருந்தனர்.



    காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.

    பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.

    இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.

    அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  #PeriyarStatueVandalised
    அறந்தாங்கியில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம், புதுகாலணியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) இவர் வெளியூரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (வயது 26). இவர்களுக்கு புவனாட்சி(8), கிருத்திகா(4) என்ற 2 மகள்களும் அருள்பிரகாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ராதிகா கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார்.

    28-ந் தேதி வீட்டின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 குழந்தைகளின் ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    அப்போது பிரபாகரன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மனைவி குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    பிரபாகரன் இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    அறந்தாங்கி அருகே நள்ளிரவில் மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவையில் தங்கியிருந்து வீடுகளுக்கு சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் கூரை அமைக்கும் பணி செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்தார்.

    வழக்கமான ஆமாஞ்சி கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை மற்றும் விவசாயம் பார்த்து வந்ததால் இரவு 8 மணிக்கே அனைவரும் தூங்க சென்று விடுவார்கள். அதேபோல் நேற்று இரவு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவக்குமார் குடும்பத்தினரும் தூங்க சென்றனர்.

    வீரபத்திரனும் சாப்பிட்டு விட்டு வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது அங்கு வீரபத்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் காணப்பட்டது.

    அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் 2 மது பாட்டில்கள், அதனை குடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் கப்புகள் கிடந்தன. எனவே நள்ளிரவில் வீரபத்திரன் மற்றும் சிலர் அந்த இடத்தில் மது அருந்தியிருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் வீரபத்திரனை கொடூரமாக கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வீரபத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    வீரபத்திரன் மது குடிக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது முன் விரோதம் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×