search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "country boat"

    • அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.
    • கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிக அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்த போதிலும் கடத்தல்காரர்கள் ஊடுருவி விடுகிறார்கள்.

    இந்நிலையில் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உஷாரான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் அதற்குள் கடத் தல் கும்பல் நாட்டுப்படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.

    இதைப்பார்த்த படகில் இருந்தவர்கள் ஒரு சில மூட்டைகளுடன் கடலில் குதித்து தப்பினர். பின்னர் அந்த படகை பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது அதில் 18 மூட்டைகளில் பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    படகுடன் மாத்திரை மூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாத்திரைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட நாட்டுப்படகு பாம்பனை சேர்ந்த வெனிஸ்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர் பாண்டி(வயது30). இவர் நேற்று முன்தினம் (20-ந் தேதி) மீன்பிடி வலை, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாத னங்களை சிறிய நாட்டு படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்றார்.

    பின்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் மீன்பிடி சாதனங்களை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது பாண்டி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து மீனவர் பாண்டியை தேடினர்.

    அவர் கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நவீன ரோந்து படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    கடலில் மூழ்கிய பாண்டியை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நீடித்தது. கடலோர காவல்படையினருடன் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடி பார்த்தும் பாண்டி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி இன்று 3-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். 3 நாட்களாகியும் பாண்டியை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • நாட்டுபடகு மீன்பிடி பகுதியில் அத்துமீறல்-விசைபடகுகளை சிறைபிடித்தனர்
    • கடல்பல்லி, கடல் அட்டைகள் பறிமுதல்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியி லிருந்து முத்துகுடா வரை 32 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் பயன்படுத்தப்படுகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் கரை பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் தூரம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகு மீனவர்களுக்கு 5 நாட்டிக்கல்லிருந்து அப்பாற்பட்டே மீன்பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் விசைப்படகு மீனவர்கள், 5 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பாற்பட்டு சென்று மீன் பிடிக்காமல், நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்ற தூரத்திலேயே , விசைப்ப டகு மீனவர்களும் மீன்பிடிப்பதாகக் கூறப்படு கிறது.

    இது குறித்து அவ்வப்போது இரு தரப்பு மீனவர்களிடையே உரசல் இருந்து வருகிறது. விசைப்படகுகளில் அரிவலைகளை பயன்படு த்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் அள்ளி எடுக்கப்படுகிறது என்றும், இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்கால த்தில் எதிர்காலத்தில் இந்த கடல் பகுதியில் மீன் இனமே இருக்காது என்றும் நாட்டு படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆர்புது ப்பட்டினம் அருகே நாட்டுப்படகு மீனவர்கள் வலை விரித்து வைத்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற விசைப்படகு மீனவர்கள் விரிக்கப்பட்டி ருந்த வலைகளை அறு த்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நாட்டுப்ப டகு மீனவர்கள், வலைகளை அறுத்த கோட்டைப்பட்டினம் மற்றும் தொண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 விசைப்படகுகளை சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தகவலறிந்த கடலோரக் காவல் படையினர், மீன்வளத் துறை அதிகாரிகள் ஆகியோர் கரைக்கு கொண்டு வரப்பட்ட 2 விசை படகுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் 2 படகுகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட 61 கடல் பல்லி, 9 கடல் அட்டை ஆகியவைகள் வலைகளில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து கடல் அட்டை மற்றும் பல்லிகளை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து நாட்டுப் படகு மீனவர்கள் கூறும்போது, விசை ப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் 80 லட்சம் மதிப்பிலான வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரிவலையை பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் மீன்வளமே கேள்விக்குறியாகிவிடும் எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் மீனவ மக்கள் ஒன்றிணைந்து மிகப் பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். மேலும் தீர்வு காணும் வரை சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மாட்டோம். அந்த படகுகள் எங்களிடமோ அல்லது அரசு அதிகாரிகள் வசமோ இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

    ×