search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பன் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன? 3-வது நாளாக தேடுதல்
    X

    பாம்பன் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன? 3-வது நாளாக தேடுதல்

    • கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர் பாண்டி(வயது30). இவர் நேற்று முன்தினம் (20-ந் தேதி) மீன்பிடி வலை, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாத னங்களை சிறிய நாட்டு படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்றார்.

    பின்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் மீன்பிடி சாதனங்களை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது பாண்டி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து மீனவர் பாண்டியை தேடினர்.

    அவர் கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நவீன ரோந்து படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    கடலில் மூழ்கிய பாண்டியை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நீடித்தது. கடலோர காவல்படையினருடன் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடி பார்த்தும் பாண்டி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி இன்று 3-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். 3 நாட்களாகியும் பாண்டியை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×